தந்தையர் தினம் 2020 : வாழ்த்துகள் அப்பா.. பெங்களூரிலிருந்து அழகிய மடல்!
சென்னை: தந்தையர் தினத்தையொட்டி நமது வாசகர்கள் தத்தமது அப்பா குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். பலர் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் அப்பாதான் முதல் ஹீரோ.. அம்மாவுக்கு அடுத்து அத்தனை பேரும் பாசம் காட்டுவது அப்பாதான். அப்படிப்பட்ட அப்பாக்களைப் பெருமைப்படுத்தும் நாளாக நாளை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பெங்களூரைச் சேர்ந்த நமது குட்டி வாசகர்கள் ஏ.டி நித்யஸ்ரீ மற்றும் ஏ. அனிஷ் ஆகிய இரு வாசகர்களும் தமது தந்தையைப் பற்றி மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்து தங்களது தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துகளையும் கூறியுள்ளனர்.

முழுக்க ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் நித்யஸ்ரீ என் அப்பாதான் என் ஹீரோ என்று ஆரம்பித்து தந்தையின் பெருமையை அழகாக கவிதை பாடியுள்ளார் நித்யஸ்ரீ. அந்த வாழ்த்தை அப்படியே புகைப்படமாக உங்களிடம் வைக்கிறோம்.. வாழ்த்துகள் நித்யஸ்ரீ.

அடுத்த குட்டி வாசகர் நம்ம ஏ அனிஷ். இவரும் அழகாக தனது தந்தை பற்றி எழுதியுள்ளார். 6 வயது ஆகிறதாம் அனிஷுக்கு. தனது மடலில், ஐ லவ் மை டாட். அவர் என்னுடன் விளையாடுவார். என்னை திட்ட மாட்டார். அடிக்க மாட்டார். இரவு நேரத்தில் விதம் விதமாக கதை சொல்வார். எனது அப்பாவுக்குப் பிடித்த கலர் நீலம். என்னை எப்போதும் எனது தந்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பார். அவர் அமைதியானவர் என்று அழகாக சொல்லியுள்ளார் குட்டிச் செல்லம் அனிஷ்.
நித்யஸ்ரீ மற்றும் அனிஷ் அப்பாவுக்கு நம்முடைய வாழ்த்துகள்.













Click it and Unblock the Notifications