ஒன்றரை பவுன் நகையா.. மதுரவாயலை திகைக்க வைத்த திருநங்கை.. வியந்து போன போலீஸ்.. என்ன நடந்தது?
சென்னை: மதுரவாயலில் திருநங்கை ஒருவர் செய்த செயல் அப்பகுதி போலீசார் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் தற்போது திருநங்கைகள், திருநம்பிகள் பலர் பல்வேறு புதிய பணிகள், சிறுதொழில்களை நடத்த தொடங்கி உள்ளனர். தவறான வழிகாட்டுதல்களால் ஒரு சிலர் பாலியல் தொழில், பிச்சை எடுப்பதில் முடங்கினாலும் பலர் அதில் இருந்து வெளியே வந்து பலர் பல சாதனைகளை படைக்க தொடங்கி உள்ளனர்.
உணவு கடைகள், டீ கடைகள் தொடங்கி பல சிறிய சிறிய கடைகள் நடத்துவது மட்டுமின்றி மருத்துவ துறை, போலீஸ் துறையிலும் கூட திருநங்கைகள் பலர் பணியாற்ற தொடங்கி உள்ளனர்.

எப்படி?
இந்த நிலையில்தான் மதுரவாயலில் திருநங்கை ஒருவர் செய்த செயல் ஒன்று அப்பகுதி போலீசார் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரவாயல், சொக்கநாதன் நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் செல்விசந்தோஷம்(37). திருநங்கையான இவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

திருநங்கை சென்னை
நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மதுரவாயல், மேட்டுக்குப்பம் சாலை சந்திப்பில் கீழே கிடந்த பிரேஸ்லெட்டை கண்டெடுத்தார். அந்த நகையை தேடி யாரும் வராததால் சுமார் 1 1/2 பவுன் மதிப்புள்ள நகையை கொண்டு மதுரவாயில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரிடம் ஒப்படைத்தார். ஆம் ஒன்றரை பவுன் நகை.

அபகரிக்கவில்லை
இந்த நகையை பார்த்ததும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. மாறாக அதை எடுத்துக்கொண்டு நேரடியாக அப்போதே போலீஸ் நிலையம் சென்றுள்ளார். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் அந்த நகைக்கு சொந்தக்காரர் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

பாராட்டு
அவரின் இந்த செயலை பார்த்து போலீசார் வியந்து போனார்கள். சாலையில் கிடந்த 1 1/2 பவுன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மருத்துவரான திருநங்கையை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
அந்த திருநங்கை கொடுத்த நகை விரைவில் உரியவர்களிடம் அளிக்கப்படும் என்று போலீசார் தரப்பு உறுதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications