ஒன்றரை பவுன் நகையா.. மதுரவாயலை திகைக்க வைத்த திருநங்கை.. வியந்து போன போலீஸ்.. என்ன நடந்தது?
சென்னை: மதுரவாயலில் திருநங்கை ஒருவர் செய்த செயல் அப்பகுதி போலீசார் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் தற்போது திருநங்கைகள், திருநம்பிகள் பலர் பல்வேறு புதிய பணிகள், சிறுதொழில்களை நடத்த தொடங்கி உள்ளனர். தவறான வழிகாட்டுதல்களால் ஒரு சிலர் பாலியல் தொழில், பிச்சை எடுப்பதில் முடங்கினாலும் பலர் அதில் இருந்து வெளியே வந்து பலர் பல சாதனைகளை படைக்க தொடங்கி உள்ளனர்.
உணவு கடைகள், டீ கடைகள் தொடங்கி பல சிறிய சிறிய கடைகள் நடத்துவது மட்டுமின்றி மருத்துவ துறை, போலீஸ் துறையிலும் கூட திருநங்கைகள் பலர் பணியாற்ற தொடங்கி உள்ளனர்.

எப்படி?
இந்த நிலையில்தான் மதுரவாயலில் திருநங்கை ஒருவர் செய்த செயல் ஒன்று அப்பகுதி போலீசார் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரவாயல், சொக்கநாதன் நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் செல்விசந்தோஷம்(37). திருநங்கையான இவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

திருநங்கை சென்னை
நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மதுரவாயல், மேட்டுக்குப்பம் சாலை சந்திப்பில் கீழே கிடந்த பிரேஸ்லெட்டை கண்டெடுத்தார். அந்த நகையை தேடி யாரும் வராததால் சுமார் 1 1/2 பவுன் மதிப்புள்ள நகையை கொண்டு மதுரவாயில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரிடம் ஒப்படைத்தார். ஆம் ஒன்றரை பவுன் நகை.

அபகரிக்கவில்லை
இந்த நகையை பார்த்ததும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. மாறாக அதை எடுத்துக்கொண்டு நேரடியாக அப்போதே போலீஸ் நிலையம் சென்றுள்ளார். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் அந்த நகைக்கு சொந்தக்காரர் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

பாராட்டு
அவரின் இந்த செயலை பார்த்து போலீசார் வியந்து போனார்கள். சாலையில் கிடந்த 1 1/2 பவுன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மருத்துவரான திருநங்கையை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
அந்த திருநங்கை கொடுத்த நகை விரைவில் உரியவர்களிடம் அளிக்கப்படும் என்று போலீசார் தரப்பு உறுதி அளித்துள்ளது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications