ஒன்றரை பவுன் நகையா.. மதுரவாயலை திகைக்க வைத்த திருநங்கை.. வியந்து போன போலீஸ்.. என்ன நடந்தது?
சென்னை: மதுரவாயலில் திருநங்கை ஒருவர் செய்த செயல் அப்பகுதி போலீசார் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் தற்போது திருநங்கைகள், திருநம்பிகள் பலர் பல்வேறு புதிய பணிகள், சிறுதொழில்களை நடத்த தொடங்கி உள்ளனர். தவறான வழிகாட்டுதல்களால் ஒரு சிலர் பாலியல் தொழில், பிச்சை எடுப்பதில் முடங்கினாலும் பலர் அதில் இருந்து வெளியே வந்து பலர் பல சாதனைகளை படைக்க தொடங்கி உள்ளனர்.
உணவு கடைகள், டீ கடைகள் தொடங்கி பல சிறிய சிறிய கடைகள் நடத்துவது மட்டுமின்றி மருத்துவ துறை, போலீஸ் துறையிலும் கூட திருநங்கைகள் பலர் பணியாற்ற தொடங்கி உள்ளனர்.

எப்படி?
இந்த நிலையில்தான் மதுரவாயலில் திருநங்கை ஒருவர் செய்த செயல் ஒன்று அப்பகுதி போலீசார் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரவாயல், சொக்கநாதன் நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் செல்விசந்தோஷம்(37). திருநங்கையான இவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

திருநங்கை சென்னை
நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மதுரவாயல், மேட்டுக்குப்பம் சாலை சந்திப்பில் கீழே கிடந்த பிரேஸ்லெட்டை கண்டெடுத்தார். அந்த நகையை தேடி யாரும் வராததால் சுமார் 1 1/2 பவுன் மதிப்புள்ள நகையை கொண்டு மதுரவாயில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரிடம் ஒப்படைத்தார். ஆம் ஒன்றரை பவுன் நகை.

அபகரிக்கவில்லை
இந்த நகையை பார்த்ததும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. மாறாக அதை எடுத்துக்கொண்டு நேரடியாக அப்போதே போலீஸ் நிலையம் சென்றுள்ளார். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் அந்த நகைக்கு சொந்தக்காரர் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

பாராட்டு
அவரின் இந்த செயலை பார்த்து போலீசார் வியந்து போனார்கள். சாலையில் கிடந்த 1 1/2 பவுன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மருத்துவரான திருநங்கையை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
அந்த திருநங்கை கொடுத்த நகை விரைவில் உரியவர்களிடம் அளிக்கப்படும் என்று போலீசார் தரப்பு உறுதி அளித்துள்ளது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications