எல்லாத்துக்கும் காரணம் அவங்கதான்.. இதுவரை பதில் இல்லை.. கொந்தளித்த நிதியமைச்சர் பிடிஆர்.. என்னாச்சு?
நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் மத்திய அரசை விமர்சித்துள்ளார்
சென்னை: மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இன்று வரை சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
பண மதிப்பு நீக்கம் "இந்திய நாணய பரிசோதனை குறித்த பார்வை" புத்தக வெளியீடு, சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினர்களாக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும், பொருளாதார அறிஞரும் மாநில திட்டக்குழு ஆணையத்தின் துணைத்தலைவருமான ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கறுப்பு பணம்
இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெயரஞ்சன், "கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற முடிவு பொருளாதார முடிவல்ல.. இது நிச்சயம் அரசியல் முடிவு தான்.. சாமானியர்களும், சாமானிய மக்களும் பணமதிப்பு நீக்கத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.. அரசின் கொள்கைகளை கேள்வி கேட்பவர்கள், விமர்சிப்பவர்கள் இருக்கக் கூடாது என்று பல்வேறு முடிவுகள் பணமதிப்பிழப்பு காலத்தில் எடுக்கப்பட்டன" என்று திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பேசினார்

திருக்குறள்
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார்.. ஆங்கிலத்தில் அவர் பேசினாலும், திருக்குறளை எடுத்து சொல்லி அதற்கான விளக்கத்தையும் பிடிஆர் விரிவாக கூறியிருந்தது அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

விரிவான ஆய்வு
தொடர்ந்து அவர் பேசும்போது, "பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறான முன் உதாரணம்.. அரசு எடுத்த முடிவால் இன்று வரை சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. பொதுமக்கள் வங்கியில் சேமித்து வைத்திருக்கும் பணத்தை எடுக்க கூடாது என்று எந்த சட்டத்தில் இருக்கிறது? இதை நான் ஏற்கனவே கேள்வி கேட்டேன்.. ஆனால், இன்று வரை இந்த கேள்விக்கு பதில் இல்லை.. வரி வசூல் தொடர்பாக விரிவான ஆய்வு செய்ய வேண்டும்" என்று தன்னுடைய உரையில் கேட்டுக் கொண்டார்.

கண்டனம்
பணமதிப்பு நீக்கம் குறித்து பிடிஆர் பலமுறை தன்னுடைய கண்டனத்தையும், அது சம்பந்தமான விளக்கத்தையும் தந்துள்ளார்.. ஒருமுறை இவர், "இந்திய வரலாற்றின் மிகமோசமான மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு பணமதிப்பிழப்பு. அதன் ஓராண்டு நிறைவையொட்டி 2 கட்டுரைகளை எழுதினேன்.. தன்னை கடவுளாக பாவித்த ஒரு மனிதனின் துக்ளக்கிய செயல்கள் இன்றும் நம்மை வதைக்கிறது. ஏழை எளியவர்கள் பெருந்துயரத்துக்கு உள்ளாகினர்" என்று பதிவிட்டிருந்த ட்வீட்டானது பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தி இருந்தது.

பரபரபபு
அதுபோலவே ஜெயரஞ்சனும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவையும், சமூகத்தில் அது ஏற்படுத்திய தாக்கத்தையும், தன்னுடைய டிவி விவாதங்களில் பலமுறை விரிவாக பேசி வந்துள்ளார்.. இந்நிலையில் இவர்கள் இருவருமே இன்று ஒன்று சேர்ந்து, நிகழ்த்திய உரை இன்றைய சூழலில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications