ஒருத்தரையும் விடலையே.. பிரதமர் மோடியை எதிர்த்த காங்கிரஸார் 600 பேர் மீது வழக்கு! சென்னை போலீஸ் அதிரடி
சென்னை: சென்னையில் நேற்று பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி வந்தார். இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸார் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பலூன்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் சென்னைக்கு ஒருநாள் பயணமாக வந்தார். சென்னை உலக தரத்தில் கட்டப்பட்டுள்ள சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதுதவிர மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய மோடி கட்டி முடிக்கப்பட்ட பாலம், சாலைகளையும் கணொலி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மோடி பெயர் சர்ச்சையில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர். தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதன் ஒருபகுதியாக நேற்று பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி, கருப்பு பலூன் பறக்கவிட காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்தனர். இதை முன்கூட்டியே அறிந்த போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கருப்பு பலூன்களை பறிமுதல் செய்தனர். இருப்பினும் கூட பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பலரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். கலைந்து செல்ல கூறியும் காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து செல்வில்லை. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரதமர் மோடி வரும் சமயத்தில் இந்த சம்பவம் நடந்தது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் சென்னை வள்ளளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உள்பட 600 பேர் மீது நுங்கம் பாக்கம் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்த பாதுகாப்பு பணியில் மொத்தம் 22 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
***
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications