சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் தீவிபத்து..அவசரமாக வெளியேறிய மக்கள்
சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
சென்னை: ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் பிரபல வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. சினிமா தியேட்டர்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து மயிலாப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிபத்து குறித்து தகவலறிந்து போலீசார் விரைந்துள்ளனர். தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர், விபத்திற்கான காரணம் குறித்து விரிவான தகவல்கள் பின்னர் தெரியவரும்.












Click it and Unblock the Notifications