ஓடும் பஸ்ஸில் குபுகுபுவென பற்றிய தீ.. அலறி அடித்து உயிர் தப்பிய மாணவர்கள்.. சென்னை அருகே பரபரப்பு
சென்னை அருகே ஓடும் பேருந்தில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Recommended Video
சென்னை: நடுரோட்டில் காலேஜ் பஸ் குபுகுபுவென தீப்பிடித்து எரிவதை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் இயங்கி வருவது அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி. இது அன்னை வேளாங்கண்ணி கல்விக்குழுமத்தை சார்ந்தது என கூறப்படுகிறது. இந்த கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்ல தனியாக பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று மாலை கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு, காலேஜ் பஸ் ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்ஸில் தீப்பிடித்து புகை வர தொடங்கியது. இதனால் டிரைவர் உடனடியாக பஸ்ஸை ஒரு ஓரமாக நிறுத்தினார்.
அதற்குள் பஸ்ஸூக்குள் இருந்த மாணவ, மாணவிகள் அவசர அவசரமாக பஸ்ஸில் இருந்து இறங்கி, உயிர் தப்பிவிட்டனர். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் பஸ் முழுவதும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. தீ விபத்து குறித்து உடனடியாக தாம்பரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நடுரோட்டில் பஸ் தீ பிடித்து எரிவதை கண்டு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிதறி ஓடினார்கள். 2 வாகனங்களில் தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கின. ஆனாலும் பஸ் முழுவதுமாக எரிந்து கருகிவிட்டது.
நல்லவேளையாக, மாணவர்கள் உடனடியாக சுதாரித்து இறங்கிவிட்டதால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பரபரப்பு நிறைந்த சாலையில் பஸ் தீப்பிடித்து எரிவதால் ஜிஎஸ்டி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் டிராமிக்ஜாமும் ஏற்பட்டுள்ளதால், போலீசார் அதனை சீர்படுத்தி வருகிறார்கள்.