அதிமுக பொன்விழா.. முதல்வர் ஸ்டாலினை பின்பற்றும் எடப்பாடி பழனிசாமி.. ட்விட்டர் ஸ்பேஸில் உரை!
சென்னை: அதிமுக பொன்விழா நிறைவு நாளன்று ட்விட்டர் ஸ்பேஸில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் தகவல் தொழில்நுட்பம் மூலம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கு என தகவல் தொழிற்நுட்ப அணியை கொண்டுள்ளது.
தகவல் தொழிற்நுட்ப அணியின் மூலம் கட்சியின் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர். இதன் அடுத்தக் கட்டமாக சமூக வலைதளம் மூலம் தொண்டர்களிடம் பேசும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

திமுகவை பின்பற்றும் கட்சிகள்
அந்த வகையில் அண்மைக் காலமாக ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் மத்தியில் உரையாடுவது அதிகரித்து வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரைத் தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் பேச உள்ளார்.

ஸ்பேஸில் மு.க.ஸ்டாலின்
செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணி கொண்டாடி வந்தது. இதற்காக கடந்த மாதம் தினந்தோறும் ட்விட்டர் ஸ்பேஸில் பல்வேறு திமுக தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். அந்த வகையில் கடைசி நாளன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக ட்விட்டர் ஸ்பேஸ் மூலம் தொண்டர்களிடம் உரையாற்றியது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

ட்விட்டர் ஸ்பேஸில் இபிஎஸ்
இணையதளம் மூலம் தொண்டர்களிடம் பேசும்போது இளைஞர்கள் கூடுதல் கவனமும் கொடுப்பதாக பார்க்கப்படுகிறது. இதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அமெரிக்காவில் இருந்த போது பின்பற்றினார். தற்போது திமுக, பாஜக ஆகிய கட்சிகளை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் உரையாற்றப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொன்விழா நிறைவு
நாளை அதிமுக பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, 51வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது. இதற்காக பொதுக் கூட்டங்கள், விழாக்கள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில், அதிமுக தகவல் தொழிற்நுட்ப அணி சார்பாக ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தில் முக்கிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சியில், பொன்விழா கண்ட அஇஅதிமுக எனும் தலைப்பில் எடப்பாடி பழனிசாமி நாளை இரவு 7.40 மணிக்கு உரையாற்ற உள்ளார்.
-
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications