செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் நியமனம்
சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கும் கலெக்டர்களை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் சமீபத்தில் உருவாக்கப்பட்டன. இவ்வாறு மாவட்டத்தை வரையறை செய்ய சிறப்பு அதிகாரிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்திருந்தார். அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மாதமாக அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு, தாலுகா பிரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், புதிய மாவட்டங்களுக்கு யாரையெல்லாம் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்ததோ, அவர்களையே, அந்தந்த மாவட்டங்களின் கலெக்டர்களாக நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, கள்ளக்குறிச்சிக்கு கிரண் குராலா, தென்காசி மாவட்டத்திற்கு, அருண் சுந்தர் தயாளன், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு, திவ்யதர்ஷினி, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சிவன் அருள், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜான் லூயிஸ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர்களாகியுள்ளனர். அனைவருமே இளம் வயதினர் என்பது சிறப்பாகும்.
இந்த மாவட்டங்களுக்கு போலீஸ் எஸ்பிக்களாக 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று காலை நியமிக்கப்பட்டனர். இதன்படி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக உள்ள, விஜயகுமார், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி துணை கமிஷனர் சுகுனா சிங் தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை பட்டாலியன் கமாண்டண்ட் ஜெயச்சந்திரன் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பியாகவும், காஞ்சிபுரம் எஸ்.பியாக உள்ள கண்ணன், செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், திருச்சி துணை கமிஷனர் மயில்வாகனன் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும் எஸ்.பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம்












Click it and Unblock the Notifications