Flash Back: சீமான் விவகாரத்தில் தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி- சிக்கி சிறைக்கு போன ஹரிநாடார்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் முதல் மனைவி நான்; என்னை ஏமாற்றிவிட்ட சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீசில் புகார் கொடுத்து மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.
நடிகை விஜயலட்சுமி, தாமே சீமானின் மனைவி; தற்போதைய மனைவி கயல்விழிக்காக பொறுமை காக்கிறேன். எனக்கு சீமான் ஒரு நீதி வழங்க வேண்டும் என்றெல்லாம் இடைவிடாமல் வீடியோ பதிவுகள் வெளியிட்டு வந்தார் நடிகை விஜயலட்சுமி. நாம் தமிழர் கட்சியினருக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களும் நடந்தன. சில நேரங்களில் சீமானை ஒருமையில் விமர்சித்தும் வீடியோக்களை விஜயலட்சுமி வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று திடீரென சென்னை போலீசில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஜயலட்சுமி புகார் மனு கொடுத்துள்ளார். அவருடன் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை விஜயலட்சுமி, சீமான் விவகாரத்தில் தற்கொலை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி, என்னால் வாழ முடியவில்லை; என் சாவுக்கு நாம் தமிழர் கட்சியின் சீமானும், பனங்காட்டுப் படை ஹரி நாடாருமே காரணம் என கூறியிருந்தார். இதன் பின்னர் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சென்னை மருத்துவமனையில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டார். அப்போது விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின்னர் நடிகை விஜயலட்சுமியை மிரட்டியதாகவும் ஒரு வழக்கில் ஹரிநாடார் கைது செய்யப்பட்டார். அப்போது கருத்து தெரிவித்த சீமான், எனக்கு குரல் கொடு என நானா ஹரிநாடாரை கேட்டேனா? அவர் எதற்காக இதில் தலையிட்டார்? நானா தலையிட சொன்னேன் எனவும் சீமான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications