விவசாயத்தை விட தொழிற்சாலை மிகவும் முக்கியம்.. விஜயகாந்த் சொன்ன காரணம் தான் ஹைலைட்.. பிளாஷ்பேக்
சென்னை: விவசாயத்தை விட தொழிற்சாலை மிகவும் முக்கியம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ இப்போது அதிக மக்களால் பகிரப்பட்டு வருகிறது. அதற்கு அவர் சொன்ன காரணம் தான் மிகவும் முக்கியமாக இன்றைக்கும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்கள் விவசாயத்தையும் அதை சார்ந்த தொழில்களையுமே செய்து வருகிறார்கள். விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. அதிகப்படியான விளைச்சல் காரணமாக விலைகள் கிடைப்பது இல்லை. பருவ நிலை மாற்றம் காரணமாக விளைச்சல் குறைவதோ அல்லது அதிகமாகுவதோ நடக்கிறது. அதே நேரம் விதை, உரம் பூச்சி கொல்லி மருந்து, அறுப்பு கூலி ஆகியவற்றை கணக்கு பார்த்தால் ஒன்றுமே மிஞ்சுவது இல்லை. லாபம் இல்லாத தொழிலாளாக பல வருடங்களாக விவசாயம் இந்தியாவில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆய்வுகளின் படி, மொத்த விவசாய நிலப்பரப்பான சுமார் 1.30 கோடி ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு மட்டும்தான் இதுவரை பாசன வசதி செய்யப்பட்டிருக்கிறதாம். இதில், கால்வாய் பாசனம் மூலம் 29 சதவீதம் , குளத்துப் பாசனம் மூலம் 21 சதவீதம், கிணற்றுப் பாசனம் மூலம் 50 சதவீதம் நிலங்கள் பாசனம் பெறுகின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
குளங்கள் மூலம் பாசன வசதி பெற்றவை 1960-இல் 22 லட்சம் ஏக்கராக இருந்தது. இது 2000-இல் 15 லட்சம் ஏக்கராகவும், தற்போது 8 லட்சம் ஏக்கராகவும் சுருங்கி விட்டது. சராசரியாக ஒரு குளத்தின் மூலம் 45 ஏக்கர் பாசனம் பெற்றுவந்த நிலையில், இப்போது 20 ஏக்கருக்கும் கீழாகக் குறைந்துவிட்டது என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன,
90 சதவீத இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் 1,000 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால், தமிழகத்தில் கிணற்றுப்பாசனம் அழிந்து போய்விட்டது. மாநிலத்தில் சுமார் 20 லட்சம் கிணறுகள் உள்ளன. சுமார் 15.36 லட்சம் ஹெக்டேர் நிலத்துக்கு கிணற்றுப் பாசனம் ஆதாரமாக உள்ளதாக கூறப்ட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே 53 சதவீத கிணறுகள் முற்றிலும் வறண்டு விட்டன. 27 சதவீதம் கிணறுகள் விவசாயப் பயன்பாட்டுக்குப் பொருத்தமில்லாத உவர் நீர் உள்ளதாகி விட்டன. மீதியுள்ள 20 சதவீதக் கிணறுகளில் தினமும் 2 முதல் 5 மணி நேரம் இறைப்பதற்கே நீர் இருக்கிறது என்றும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் சொல்கின்றன.
பசுமைப் புரட்சிக்குப் முன்பு 1960-களில் இருந்த நீராதாரங்களின் நிலையையும் இழந்து, புதிய பாசன வசதியையும் பெறாமல், எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல் இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் காணப்படுகிறது
இந்த சூழலில் விவசாயிகள் கஷ்டத்தை விஜயகாந்த் ஒரு முறை பேசிய பழைய வீடியோ இப்போது பரவி வருகிறது. அதில் விவசாயத்தை விட தொழிற்சாலை மிகவும் முக்கியம் என்று விஜயகாந்த் கூறியிருப்பார்.
அந்த வீடியோவில் விஜயகாந்த் கூறுகையில், ஒரு இரண்டு ஏக்கர் நிலம் இருக்கு என்று வையுங்கள். நானே ஒரு தாய் தகப்பனாக இருக்கிறேன்னு வச்சுக்கங்க.. எனக்கு பூர்வீகமாக இரண்டு ஏக்கர் நிலம் இருக்கு.எனக்கு கல்யாணம் ஆகுது. எனக்கு பிள்ளை பிறக்குது.. அந்த பிள்ளை குட்டிகளுக்கு பிள்ளை குட்டிகள் பிறக்குது.. அதே இரண்டு ஏக்கர் வருமானத்தை வச்சு குடும்பத்தை நடத்த முடியுமா? அவங்களும் பிள்ளைகளை படிக்க வைக்கிறாங்க.. அவங்களுக்கு படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கனும், வேலை வரனும்னா தொழிற்சாலை வரனும்." என்று விஜயகாந்த் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக மக்களால் பகிரப்படுகிறது.
விவசாயத்தை விட ஏன் தொழிற்சாலைகள் முக்கியம் - கேப்டன் 🔥❤ pic.twitter.com/4H9wFRhDWi
— Newman (@roadoram) May 29, 2023
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications