ஃபிளிப்கார்ட்டில் கேமரா ஆர்டர் செய்த இளைஞர்.. பார்சலை திறந்து பார்த்தால்.. செம அதிர்ச்சி..!
பிளிப்கார்ட் ஆஃபர் கேமிரா ஆடர் செய்த பார்சலில், பெயிண்ட் டப்பா வந்துள்ளது
சென்னை: பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் கேனான் 300D கேமிரா ஆடர் செய்த பார்சலில், பெயிண்ட் டப்பா இருந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்... புதுவண்ணாரப்பேட்டையில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

போட்டோ எடுக்கும் ஆசையில் ஃபிளிப்கார்ட்டில் வந்த ஆஃபர் மூலம் 28,500 ரூபாய் மதிப்புள்ள கேனான் EOS 3000 D ரக கேமராவை ஆர்டர் செய்துள்ளார்... இதற்காக 12 மாதங்கள் இ.எம்.ஐ. தவணையையும் பதிவு செய்துள்ளார்.
அதன்படி, இன்று காலை பிளிப்கார்ட் நிறுவனத்தின் இருந்து பார்சல் வந்தது.. வினோத் என்ற டெலிவரி ஊழியர், அந்த பார்சலை கொடுத்துள்ளார்... எடை குறைவாக இருந்ததால் சந்தேகமடைந்த வினோத் அந்த சீலிடப்பட்ட பார்சலை உடனடியாக பிரித்து பார்த்த போது கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அதில், கேமராவுக்கு பதிலாக குழந்தைகள் விளையாடும் பழைய பிளாஸ்டிக் கேமராவும், லென்ஸிற்கு பதிலாக பெயிண்ட் டப்பாவும் இருந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தார்... இதனையடுத்து வினோத் இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்...
வினோத்தின் புகாரின் பேரில் இந்த குளறுபடிக்கு காரணம் யார்? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நபர்களிடம், மோசடி நடந்து வருகிறது.. இதனால், பொது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications