ஒரே பனிமூட்டமா இருக்குதே.. இது எப்ப சார் போகும்?.. மழை எப்போ வரும்? நெட்டிசனுக்கு வெதர்மேன் பதில்!
சென்னை: தமிழகத்தில் பனிப்பொழிவு எப்போது நீங்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட் தந்திருக்கிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. கடந்த 11-ஆம் தேதி ஒரு காற்றழுத்தம் உருவானது. அது புயலாக வலுப்பெறாமல் வலுவிழந்தது. எனினும் இந்த காற்றழுத்தம் மிக கனமழையை கொடுத்தது.
இந்த மழையால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அதிக அளவு மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி ஒரு காற்றழுத்தம் உருவானது. இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் வலுவடையவில்லை.

4 நாட்கள்
இந்த காற்றழுத்தத்திற்கு இடையே 4 நாட்களுக்கு பனிப்பொழிவு இருக்கும் என சொல்லப்பட்டது. அதாவது வடகிழக்கு தமிழகம், தமிழகத்தின் உள்மாவட்டங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு பனிமூட்டமாகத்தான் இருக்கும் என கடந்த 16 ஆம் தேதியே தமிழ்நாடு வெதர்மேன் கணித்திருந்தார்.

கடுங்குளிர்
அதன்படி கடந்த சில தினங்களாக மாலை 5 மணிக்கு மேல் கடுங்குளிர் நிலவி வந்தது. அது போல் காலை வேளைகளிலும் பனிப்பொழிவால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் எல்லா வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. அது போல் வாகனங்களின் மீது பனித்துளிகள் இருந்தன. அதுவும் குடியிருப்புகள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளிலும் குளிர் தெரிந்தது.

இரு சக்கர வாகனம்
மாலை 5 மணி வாக்கில் இரு சக்கர வாகனத்தில் 30 கி.மீ. வேகத்தில் சென்றாலும் கூட குளிர் காற்று காதில் பாய்ந்து சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த கடுங்குளிரால் காலையிலும் மாலையிலும் வாக்கிங் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காலை வேளைகளில் ஃபேனை ஃபுல் ஸ்பீடு கூட ஓட வைக்காமல் மக்கள் குளிரால் அவதியடைந்தனர்.

மழை வராது
குளிர் இருக்கும் போது மழை வராது என்பார்கள். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேனிடம் நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதாவது தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை இல்லை எனில் குளிர்காலம் எப்போது முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு வெதர்மேன் நாளை பனிப்பொழிவு முடியும் என தெரிவித்துள்ளார். நாளையுடன் பனிப்பொழிவு முடியும் என்றால் நாளை மறுநாள் முதல் மழைத் தொடங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications