Kollangudi Karuppayi: ஆண் பாவம் நடிகை! நாட்டுப்புற பாடகி "கலைமாமணி" கொல்லங்குடி கருப்பாயி காலமானார்
சென்னை: நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி தனது வயது மூப்பு காரணமாக அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 99. அவர் தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
சிவகங்கை மாவட்டம் மதுரை- தொண்டியில் கொல்லங்குடி எனும் கிராமத்தில் பிறந்தவர் கருப்பாயி. இவர் அகில இந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராக 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். இவர் பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார்.

இதன் மூலம் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் ஆண் பாவம், கோபாலா கோபாலா, ஆயுசு நூறு உள்ளிட்ட படங்களிலும் கொல்லங்குடி கருப்பாயி நடித்துள்ளார். இவருக்கு 1993 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதலே வறுமையில் வாடி வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கொல்லங்குடி கருப்பாயி ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், என் அம்மா அப்பா என்னை படிக்க வைக்கவில்லை. சாணி அள்ளுதல், மாடு மேய்த்தல், ஊர் மந்தையில் விளையாடி பொழுதைக் கழித்தல் உள்ளிட்டவைகளிலேயே என் இளமை காலம் போனது.
7 வயது முதலே ஆடு மாடு மேய்க்க போற காட்டுல எனக்கு தெரிந்த வார்த்தைகளை வைத்து பாடினேன். எம்ஜிஆர், ராஜீவ் காந்தி காலமான போது நான் மார்பில் அடித்துக் கொண்டு பாடிய பாடலை ஊரே அதிசயமாக கேட்டது. பர்மா கலவரத்தின் போது கால்நடையாகவே கொல்லங்குடிக்கு அத்தை, மாமா பிள்ளைகளில் ஒருவர்தான் நான் கல்யாணம் செய்து கொண்ட கணவர்.
எனக்கு 14 வயசுல திருமணமானது. நான் கலைமாமணி விருது வாங்குறதுக்கு காரணமாக இருந்தவரும் என் கணவர்தான். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. என் அக்கா பிள்ளைதான் என்னை பார்த்துகிட்டு இருந்தாள், அவளும் கார் விபத்தில் இறந்துவிட்டாள் என கூறிய இவருடைய கணவரும் விபத்தில் இறந்துவிட்டார்.
கருப்பாயி சென்னை வந்தாலே அவரை பார்க்காமல் இருக்க மாட்டாராம் பாண்டியராஜன். அது போல் கருப்பாயிக்கு நடிகர் சங்கத்துல உறுப்பினராக்கி அடையாள அட்டை வாங்கிக் கொடுத்ததும் விஷால்தானாம்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications