Kollangudi Karuppayi: ஆண் பாவம் நடிகை! நாட்டுப்புற பாடகி "கலைமாமணி" கொல்லங்குடி கருப்பாயி காலமானார்
சென்னை: நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி தனது வயது மூப்பு காரணமாக அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 99. அவர் தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
சிவகங்கை மாவட்டம் மதுரை- தொண்டியில் கொல்லங்குடி எனும் கிராமத்தில் பிறந்தவர் கருப்பாயி. இவர் அகில இந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராக 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார். இவர் பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார்.

இதன் மூலம் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் ஆண் பாவம், கோபாலா கோபாலா, ஆயுசு நூறு உள்ளிட்ட படங்களிலும் கொல்லங்குடி கருப்பாயி நடித்துள்ளார். இவருக்கு 1993 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதலே வறுமையில் வாடி வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கொல்லங்குடி கருப்பாயி ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், என் அம்மா அப்பா என்னை படிக்க வைக்கவில்லை. சாணி அள்ளுதல், மாடு மேய்த்தல், ஊர் மந்தையில் விளையாடி பொழுதைக் கழித்தல் உள்ளிட்டவைகளிலேயே என் இளமை காலம் போனது.
7 வயது முதலே ஆடு மாடு மேய்க்க போற காட்டுல எனக்கு தெரிந்த வார்த்தைகளை வைத்து பாடினேன். எம்ஜிஆர், ராஜீவ் காந்தி காலமான போது நான் மார்பில் அடித்துக் கொண்டு பாடிய பாடலை ஊரே அதிசயமாக கேட்டது. பர்மா கலவரத்தின் போது கால்நடையாகவே கொல்லங்குடிக்கு அத்தை, மாமா பிள்ளைகளில் ஒருவர்தான் நான் கல்யாணம் செய்து கொண்ட கணவர்.
எனக்கு 14 வயசுல திருமணமானது. நான் கலைமாமணி விருது வாங்குறதுக்கு காரணமாக இருந்தவரும் என் கணவர்தான். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. என் அக்கா பிள்ளைதான் என்னை பார்த்துகிட்டு இருந்தாள், அவளும் கார் விபத்தில் இறந்துவிட்டாள் என கூறிய இவருடைய கணவரும் விபத்தில் இறந்துவிட்டார்.
கருப்பாயி சென்னை வந்தாலே அவரை பார்க்காமல் இருக்க மாட்டாராம் பாண்டியராஜன். அது போல் கருப்பாயிக்கு நடிகர் சங்கத்துல உறுப்பினராக்கி அடையாள அட்டை வாங்கிக் கொடுத்ததும் விஷால்தானாம்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications