Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரியாணி சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்! ரெய்டு விட்ட உணவு பாதுகாப்பு துறை.. அலறிய சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொடுங்கையூரில் பிரபல பிரியாணி கடையில், பிரியாணி வாங்கி சாப்பிட்ட நான்கு பேருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சுகாதாரமற்ற உணவு: சமீப நாட்களாக ஓட்டல் உணவுகள் பலருக்கும் உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஃபாஸ்ட் புட் சாப்பிடுபவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு சுகாதாரமற்ற உணவுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஓட்டல்களில் சுகாதாரமான முறையில் உணவு பொருட்கள் தயாரிப்பதில்லை என்றும், எனவே அடிக்கடி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Food Safety Department officials raid a famous biryani shop in Chennai

வந்தி மயக்கம்: இந்நிலையில் சென்னையில் ஷாக் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதாவது, சென்னை கொடுங்கையூரில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 4 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் என உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதாவது கொடுங்கையூரை சேர்ந்த ரஞ்சித் குமார், இந்த பிரியாணி கடையில், குடும்பத்தினருக்காக பிரியாணியும், தந்தூரி சிக்கனையும் வாங்கி சென்றிருக்கிறார். வீட்டிற்கு வந்து அதை சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் குடும்பத்தில் இருந்த 4 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதி: இதனையடுத்து இவர்களது உறவினர்கள், இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதேபோல இந்த குறிப்பிட்ட பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட வியாசர்பாடியை சேர்ந்தவருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவர்களை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால்தான் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

ரெய்டு: இதனையடுத்து சென்னை உணவு பாதுகாப்பு கழகத்தின் தலைவர் சதீஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரியாணி கடையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனையின்போது உடலுக்கு புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்பிருக்கும் ரசாயன பொருட்கள் உணவில் கலக்கபபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பிரியாணி கடையின் ஊழியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனரர்.

கோரிக்கை: மிகவும் பிரபலமான பிரியாணி கடையில், உணவு வாங்கி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+