வரலாற்றில் முதல்முறை... புத்தாண்டில் மக்கள் இல்லாத மெரினா கடற்கரை.. மூடப்பட்ட சாலைகள்!
சென்னை: வரலாற்றில் முதல் முறையாக புத்தாண்டில் மக்கள் இல்லாத நிலையில் சென்னை மெரினா கடற்கரை காட்சி அளிக்கிறது. மெரினா செல்லும் மொத்த சாலைகளும் பேரிகார்டுகளால் இழுத்து மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்படுகிறது.
அது ஒரு கனா காலம். 2011 டிசம்பர் 31 தேதி அப்போது தான் சென்னை வந்து ஓராண்டு ஆகியிருந்ததால்..! லட்சம் மக்களில் ஒருவனாக நானும் மெரினா கடற்கரையில் முதல்முறையாக புத்தாண்டை வரவேற்றேன்.
மெரினா கடற்கரையும் திருவல்லிக்கேணியும். அதன் மேன்சகளுமே இன்றும் பேச்சுலர்களின் சொர்க்கம். கவலைகள் துயரங்களை எதுவாக இருந்தாலும் மெரினா கடற்கரையின் உப்புக்காற்றை சுவாசித்தால் காணாமல் போகும். புது நம்பிக்கை பிறக்கும்.

மக்கள் வெள்ளம்
புத்தாண்டை கொண்டாட்டம் என்பது கிராமங்களில் பெரிய அளவில் இல்லை என்பதால் சென்னை மெரினா புத்தாண்டு கொண்டாட்டத்தை பேரவலுன் அதிசயமாக பார்த்தேன். எங்கு பார்த்தாலும், மக்களின் வெள்ளம், ஆண், பெண் என்ற வித்தியாசமே இல்லை. எல்லாருமே செம்ம ஆட்டம்.

ஆக்ரோச ஆட்டம்
செல்போன் வெளிச்சங்களும், தாளங்களும், மக்களின் உற்சாக குரல்களும் மெய்சிலிர்க்க வைத்தன. வங்க கடலையும் ஆக்ரோசத்துடன் ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு மக்களின் உற்சாகம் இருந்தது. அப்போது முதல் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது மெரினா கடற்கரையில் தான் இருந்தது.

மக்கள் இல்லாத மெரினா
ஆனால் முதல்முறையாக மெரினா கடற்கரை 2021 புத்தாண்டை வரவேற்கவில்லை. தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க தடை விதித்துள்ளதால் கொண்டாட்டம் இல்லாத, மக்கள் இல்லாத மெரினா கடற்கரையாக இன்று காணப்படுகிறது. இப்படி ஒரு டிசம்பர் 31தேதி சென்னை அதன் வரலாற்றில் முதல்முறையாக பார்க்கிறது. ஆம்.. வரலாற்றில் முதல் முறையாக புத்தாண்டில் மக்கள் இல்லாத மெரினா கடற்கரையை பார்க்கிறோம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்
சென்னை மெரினா கடற்கரையில் 2021ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் இல்லாத நிலையில் இரவு 10மணி அளவில் சாலைகள் காவல்துறையினர் பேரிகார்டகர்களை கொண்டு மூடியுள்ளனர். மெரினா சாலை மக்கள் இல்லாத சாலையாக வெறிச்சோடிக் கிடக்கிறது. இப்படியும் ஒரு புத்தாண்டை சென்னை வரவேற்கிறது என்றால் அது இதுவே முதல்முறை. இனி இப்படி ஒரு வரவேற்பு எந்த ஆண்டுக்கும் வரக்கூடாது என்று வேண்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications