"அஜித்குமார் தந்தை சிறந்த பண்பாளர்" சுப்ரமணியம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஜெயக்குமார்
சென்னை: நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியத்தின் உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஜித்குமாரின் தந்தை குறித்து ஜெயக்குமார் கூறுகையில், சுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றும், அவர் சிறந்த பண்பாளர் என்றும் கூறினார்.
Recommended Video
அஜித்குமாரின் தந்தை பெயர் சுப்ரமணியம். 86 வயதான அவர், இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்ரமணியம் இன்று காலை அஜித்தின் பெசன்ட் நகர் வீட்டில் உயிரிழந்தார். இதனையடுத்து நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள், குடும்பத்தினர் இறுதிச்சடங்கை கவனிக்க தொடங்கினர்.

அஜித்குமார் தந்தை மறைவு
சுப்ரமணியத்தின் உடல் இன்றே தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் தரப்பில், தந்தை சுப்ரமணியத்தின் இறுதிசடங்கு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது. வீட்டிலிருந்து மின் மயானத்துக்கு ஆம்னி வேனில் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

உடல் தகனம்
பின்னர் மின் மயானத்தின் வாசலில் இருந்து அவரின் உடலை அஜித்குமார் சோகத்துடன் சுமந்து சென்றார். அதேபோல் எந்த பரபரப்பும் இல்லாமல் சுப்ரமணியத்தின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக நடிகர் அஜித்குமார் தந்தை சுப்ரமணியத்தின் உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

ஜெயக்குமார் நேரில் அஞ்சலி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் கூறுகையில், பாசமிகு சகோதரர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது கவலையான செய்தியாக உள்ளது. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அஜித்குமாரை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறியுள்ளோம். அவரின் தந்தையார் அவரை சிறப்பாக வளர்த்திருக்கிறார்.

சிறந்த பண்பாளர்
அஜித்குமாரின் தந்தையார் சிறந்த பண்பாளர். வீட்டில் செல்லும் போது இன்முகத்துடன் வரவேற்கும் குணம் கொண்டவர். விருந்தினர்களை கவனிக்கும் பண்புகளை நான் பகிர்ந்துகொண்டேன். அவரின் மறைவு வேதனையளிக்கக் கூடியது என்று தெரிவித்தார். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக அஜித்குமாரின் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications