வரி உயர்வுகளை எதிர்த்து போராட்டம்.. அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி சென்னையில் கைது
சென்னை: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் சென்னை தரமணியில் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட வளர்மதி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏழை எளிய மக்களை பாதிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் குடிநீர், கழிவுநீர், சொத்து வரி உயர்வு போன்றவற்றை கவனிக்க தவறிய திமுக அரசை கண்டிப்பதாக அதிமுக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை தரமணி பகுதியில் அதிமுக தெற்கு கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கலந்துகொண்டார். இந்நிலையில், அவர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். அனுமதி கொடுத்த இடத்தில் போராட்டம் செய்ததற்கே கைது செய்துள்ளனர் என பா.வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications