Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக எம்எல்ஏ, எக்ஸ் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் ஐக்கியம்! தட்டி தூக்கிய செங்கோட்டையன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன், அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சியின் போது சட்டசபை சபாநாயகராக இருந்தவர் தனபால். இவரது மகன் லோகேஷ். இவரும் அதிமுகவில் இருந்து வருகிறார்.

admk dhanapal son

கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் தற்போது அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.

பி.காம், எம்பிஏ படித்துள்ளார். இவர் அதிமுக ஐடி பிரிவு அவிநாசி தொகுதி பொறுப்பாளராகவும் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். சேலத்தில் பிறந்த லோகேஷ் தமிழ்செல்வன் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட லோகேஷ், 3 ஆவது இடத்தை பெற்றார். அதாவது அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு கிடைத்தது. முருகனுக்கும் லோகேஷுக்கும் இடையே கிட்டதட்ட 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் ஆகும்.

வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், தனது தந்தை எம்எல்ஏவாக இருந்து வரும் அவிநாசி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கினாராம். 2 மாதங்களில் என்ன நடந்தது என தெரியவில்லை. தற்போது சப்தமின்றி லோகேஷ் தவெகவில் இணைந்துவிட்டார்.

அவிநாசி அதிமுகவின் கோட்டையாகும். இங்கு 1984 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இருந்தே அதிமுக வென்று வருகிறது. இடையில் 1996 ஆம் ஆண்டு மட்டும் திமுக வென்றிருக்கிறது. மற்றபடி 1984 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக வேட்பாளரே வென்றுள்ளார்.

இந்த நிலையில்தான் அப்பாவின் தொகுதியில் போட்டியிட லோகேஷ் விருப்பமனு வழங்கினார். ஆனால் இந்த 2 மாதங்களில் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென லோகேஷ் தவெகவில் இணைந்துவிட்டார்.

அதிமுக எம்எல்ஏவாக தந்தை இருந்து வரும் நிலையில் அவரது மகன் லோகேஷ் தவெகவில் இணைந்திருக்கிறார். ஏதோ அதிருப்தியில் இருந்தவரை செங்கோட்டையன்தான் சமாதானம் பேசி தவெகவிற்கு அழைத்து சென்றுள்ளார் என சொல்லப்படுகிறது.

செங்கோட்டையனுக்கு பிறகு ஜேசிடி பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ மனோகரன், வி.எஸ்.பாபு, கு.ப.கிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், சுப்புரத்தினம் உள்ளிட்டோர் வரிசையில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் இணைந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+