நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண்.. போலீசார் சுற்றி வளைத்து தடுத்ததில் மயக்கம்!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டனார் முன்னாள் பாஜக நிர்வாகி வைஷாலி. அவரை பெண் காவலர்கள் கும்பலாக சேர்ந்து தடுத்து நிறுத்திய நிலையில் வைஷாலி மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக விவசாய அணி துணைச் செயலாளராக பொறுப்பு வகித்தவர் வைஷாலி. சில நாட்களுக்கு முன்பு பாஜகவை விட்டு வைஷாலி நீக்கப்பட்ட நிலையில், தனக்கு நியாயம் கேட்டு வைஷாலி இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்பு கோஷம் எழுப்பினார்.

Former BJP Functionary Shows Black Flag to Nainar Nagendran in Ooty Faints After Police Intervention

உதகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தபோது, கறுப்பு கொடி காட்டிய முன்னாள் நிர்வாகியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பெண் போலீசார் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தியதால் முன்னாள் பாஜக நிர்வாகி வைஷாலி மயக்கமடைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயக்கம் அடைந்த வைஷாலிக்கு தண்ணீர் கொடுத்து ஆற்றுப்படுத்தினர். பின்னர், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெண் நிர்வாகி கறுப்புக் கொடி காட்டிய சம்பவம் பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் உட்கட்சி குழப்பங்களால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+