பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்!
சென்னை: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அண்ணாமலை இயக்கத்தில் இணைந்துள்ளார். திராவிட கட்சிகளை வீழ்த்த அண்ணாமலை காட்டிய வழியை 2 ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்றியிருந்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை அந்தக் கட்சியிலிருந்து விலகினார். ஏற்கெனவே அவர் நடத்திய We the leaders என்ற அமைப்பில் தனது ஆதரவாளர்கள் இணையுமாறு அழைப்பு விடுத்தார். தற்போது வரை அண்ணாமலையின் இயக்கத்தில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.

பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகி அண்ணாமலைக்குப் பின்னால் அணிவகுத்து வருகின்றனர். பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த கரு.நாகராஜன், பாஜக மாவட்ட தலைவர்களாக இருந்த பாலாஜி உத்தம ராமசாமி, கே.வசந்தராஜன் உள்ளிட்ட பலரும் அண்ணாமலையின் அரசியல் இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திராவிட கட்சிகளை வீழ்த்த அண்ணாமலை காட்டிய வழியை 2 ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்றியிருந்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார். தற்போது பாஜகவிலிருந்து விலகியுள்ள அவர், அண்ணாமலையுடன் இணைந்து பயணிக்க தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் பேசிய நரசிம்மன், "கடந்த ஓராண்டாக தமிழக பாஜக சிறப்பாக செய்யப்படவில்லை. இது எங்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. தோ்தல் காலத்தில், கட்சியை எதிா்த்து பேசக்கூடாது என்ற நோக்கில் அமைதியாக இருந்து, தலைமை அளித்த பணியைச் செய்தோம்.
இந்த சூழ்நிலையில், பாஜகவில் தொடா்ந்து பயணித்தால் பொதுமக்களுக்கு எந்த பணியையும் செய்ய இயலாது என்பதால் விலகத் தீா்மானித்தேன். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளைத் தோற்கடித்து, ஒரு இயக்கம் ஆட்சி அமைத்துள்ளது. இதே பணியை அண்ணாமலை தலைமையில் இரண்டு ஆண்டுக்கு முன்பு மேற்கொண்டிருந்தால் இன்றைக்கு பாஜக ஆட்சிக்கு வந்திருக்கும்.
எனவே, அண்ணாமலை எடுத்துள்ள முடிவை நானும் என்னுடைய பகுதியில் உள்ள தொண்டா்களும், நிா்வாகிகளும் ஏற்று, தமிழகம் மற்றும் மக்களை காப்பதற்கும், புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், அந்த மாற்றம் அண்ணாமலை தலைமையில் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு, அவருடன் பயணிக்கத் தயாராகிவிட்டோம்.
பிரதமர் மோடியின் மீது எங்களுக்கு வருத்தமும், குறையும் இல்லை. ஆனால் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுகிறபோது அண்ணாமலைக்கு ஈடாக, இணையாக யாரும் இல்லை. ஆகவே அவரது பாதையில் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தமிழகத்தில் தேசிய எண்ணத்தை வைத்துள்ள ஒரு தமிழக கட்சியாக இந்த இயக்கம் விரைவில் வரப்போகிறது. இந்த இயக்கம், பாஜகவுக்கும், மோடிக்கும் எதிரானது அல்ல. அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் அச்சமின்றி இந்த இயக்கத்தில் இணைந்து வருகிறாா்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications