Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாவை பிரிந்து.. அம்மாவை இழந்து! கண்ணீருடன் பீலா வெங்கடேஷின் இரு மகள்கள்! கண்ணீர் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு எரிசத்தி துறை செயலாளராக பதவி வகித்து வந்த பீலா வெங்கடேஷ் (பீலா ராஜேஷ்) சமீப மாதங்களாக உடல்நிலை குன்றிய நிலையில் அப்போலோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை அவர் உயிரிழந்தார். உயிரிழந்த பீலா ராஜேஷுக்கு பிங்கி, பிரீத்தி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

தமிழக அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் (செப்டம்பர் 24) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்ற இவர், கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னையில் மரணமடைந்தார்.

Beela Rajesh Beela Venkatesh chennai

பீலா வெங்கடேசன்

பீலா வெங்கடேசன் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் பிறந்ததும், வளர்ந்ததும், கல்வி கற்றதும் அனைத்தும் சென்னையில்தான். கல்வியில் சிறந்த ஆர்வம் கொண்ட அவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய குடிமைப்பணியில் சேரும் கனவை நோக்கி முயற்சி மேற்கொண்டு, 1997 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடக்கத்தில் பிஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பணியாற்றிய அவர், மத்திய ஜவுளித்துறை மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

கொரோனா காலம்

பின்னர் தமிழக கேடரைப் பெற்று மாநிலத்துக்கு வந்து, செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத்துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். 2019 ஆம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை செயலாளராகப் பொறுப்பேற்ற பீலா வெங்கடேசன், கொரோனா பேரிடர் காலத்தில் மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்திய முகமாக விளங்கினார். தினசரி ஊடகங்களுக்கான தகவல் வெளியீடு முதல், மாவட்டங்களுக்கான நேரடி பயணங்கள் வரை தன்னாலான சிறந்த பணியைச் செய்து பாராட்டைப் பெற்றார். பின்னர், 2023 ஆம் ஆண்டு எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டார்.

பீலா வெங்கடேசன்

அதே சமயம், கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்று பெயரை "பீலா ராஜேஷ்" என்பதிலிருந்து "பீலா வெங்கடேசன்" என மாற்றிக் கொண்டார். அவரது முன்னாள் கணவர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ், பாலியல் குற்ற வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த பீலா ராஜேஷுக்கு பிங்கி, பிரீத்தி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

பீலா ராஜேஷ் மகள்கள்

கணவரை பிரிந்து தாய் பீலா ஐஏஎஸ் தனித்து வசித்து வந்த நிலையில் அவர் உடனேயே மகள்களும் வசித்து வந்தனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பீலா ஐஏஎஸ் உயிரிழந்த நிலையில் இரு மகள்களும் அவருக்கு அருகில் இருந்து கவனித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. தந்தையை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது உடல் நலக்குறைவால் தாயும் மரணித்த நிலையில் அவரது இரு மகள்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+