மீண்டும் 'செருப்பு' அட்டாக் கூடாது.. தாங்காது - முன்னாள் அமைச்சரின் 'சொந்த தொகுதி சோகம்'
சென்னை: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட வைத்திலிங்கத்துக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. என்னதான் சீட் கிடைத்தது திருப்தி என்றாலும், 5 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்திலிங்கம் தரப்பு இன்னமும் மறக்கவில்லை.
ஆம்! 2016ம் சட்டமன்ற தேர்தலை வைத்திலிங்கம் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார் என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் அறிவார்கள்.
அப்போது வேளாண்மை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், ஒரத்தநாடு அடுத்த தென்னமநாட்டில் பிராச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

செருப்பை வீசிய போலீஸ்காரர்
அப்போது, தென்னமநாட்டைச் சேர்ந்த போலீஸ்காரர் கோபி என்பவர், 'அமைச்சராகி 5 வருடம் பதவில இருந்தீங்க.. பல முறை எம்.எல்.ஏவா இருந்தீங்க.. என்ன செஞ்சீங்க இந்த தொகுதிக்கு?' என்று சப்தம் போட, உடனே அங்கு சிறிய கைக்கலப்பு ஏற்பட்டது. அப்போது, அந்த போலீஸ்காரர் தான் அணிந்திருந்த செருப்பை கழட்டி வீச, அது வைத்திலிங்கத்தின் மேல் விழுந்தது. இந்த சம்பவத்தை அங்கு கூடியிருந்த கட்சியினர், பொது மக்கள் என அனைவரும் பார்க்க நேரிட்டது.

எதிர்பாரா தோல்வி
இந்த சம்பவம் வைத்தலிங்கத்தின் தேர்தல் முடிவையே மாற்றிவிட்டது எனலாம். இத்தனை பேர் பார்க்க நடந்த அந்த சம்பவத்தை ஊர் மக்கள் அவல் போல் மென்றுக் கொண்டிருக்க, அந்த தேர்தலில் வைத்திலிங்கம், வெறும் 3642 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரனிடம் தோல்வி அடைந்தார். பப்ளிக்காக நடந்த இந்த சம்பவம் தான் வைத்திலிங்கத்தின் வெற்றி வாய்ப்பை பறித்தது.

பாதுகாப்பு அரண்
அந்த சம்பவம் நடந்த பிறகு, தனது சொந்த ஊரான ஒரத்தநாடு போவதையே வைத்திலிங்கம் வெகுவாக குறைத்துவிட்டார். அப்படியே போனாலும், அவரைச் சுற்றி ஒரு பெரும் படையே செல்லும். எவரும் எளிதில் நெருங்க முடியாத அளவுக்கு, தன்னை சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்து சொந்த ஊருக்கு சென்று வருகிறார்.

மீண்டும் அதே பாணி
அதுமட்டுமின்றி, 2019ல் நடந்த தஞ்சை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்துக்காக ஒரத்தநாடு சென்றிருந்தார். ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே பிரச்சார வேனில் முதல்வர் பழனிசாமி, த.மா.கா. வேட்பாளர் நடராஜன், வைத்திலிங்கம் ஆகியோர் நின்றுகொண்டிருந்தனர். அப்போது வேனின் பக்கவாட்டில் இருந்து முதல்வரை நோக்கி மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசினார். ஆனால், அந்த செருப்பு முதல்வர் மேல்படாமல் அவரின் பின்புறம் வேனின் மேற்பகுதியில் விழுந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த முதல்வர் மிக விரைவாக பிரச்சாரத்தை முடித்து அங்கிருந்து வெளியேறினார்.

சத்தம் போட்ட வைத்திலிங்கம்
அதுமட்டுமின்றி, கஜா புயல் சமயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை செங்கோட்டையன் உட்பட 4 அமைச்சர்கள் பார்வையிட வந்தனர். அப்போது வைந்திலிங்கத்தின் சொந்த ஊரான ஒரத்தநாடு தெலுங்கன் குடிகாட்டில், அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சொந்த ஊரிலேயே இப்படிச் செய்கிறார்களே என டென்ஷனான வைத்திலிங்கம், ஸ்பாட்டிலேயே அங்கு குழுமியிருந்தவர்களை திட்டினார்.

இம்முறை கறார்
இந்த நிலையில் தான், வைத்திலிங்கத்துக்கு மீண்டும் ஒரத்தநாட்டில் சீட் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற நடந்த விரும்பத்தகாத செயல்கள் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதில் வைத்திலிங்கம் தரப்பு உறுதியாக உள்ளதாம். மீண்டும் சொந்த தொகுதியில் 'அட்டாக்' என்றால், பாடி தாங்காது என்பதால் பாதுகாப்பு விஷயத்தில் இம்முறை கறார் காட்டப்படும் என்கிறது முன்னாள் அமைச்சர் தரப்பு.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications