Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எல்லா குடும்பங்களும் குழந்தைகளுடன்.. ஒரு முறையாவது செல்ல வேண்டிய இடம்!" எதை சொல்கிறார் ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா நூலகத்தில் தனது அனுபவம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் திமுகவை நிறுவியவருமான அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது.

முன்னாள் தமிழக முதலமைச்சர் சி.என். அண்ணாவின் 102ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, கடந்த 2010 செப்டெம்பர் 15ஆம் தேதி இந்த நூலகம் திறக்கப்பட்டது.

 Former Union Minister Chidambaram shares his experience in Anna centenary library

அப்போது தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி இந்த நூலகத்தைத் திறந்து வைத்தார். ஆசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றான இது மொத்தம் 8 தளங்களைக் கொண்டது. இந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பல லட்சம் புத்தகங்கள் உள்ளன.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் , சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தில் தனது அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 Former Union Minister Chidambaram shares his experience in Anna centenary library

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்றேன். உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ளன போல் நாம் பெருமைப்படக்கூடிய நூலகம்

இங்கு இல்லாத நூல்களே இருக்க முடியாது என்று கூறும் அளவிற்குத் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வியக்கவைத்தன. எல்லாக் குடும்பங்களும் ஒரு முறை குழந்தைகளுடன் விஜயம் செய்ய வேண்டிய அறிவுக் கூடம். புத்தாண்டில் மனம் நிறைந்து மகிழ்ச்சி அடைந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+