கர்ப்பிணிகளுக்கு, மருத்துவ அவசரங்களுக்கு.. இலவச கார் சேவை.. பல்லாவரம் ராஜேஷ் அசத்தல்!
சென்னை: சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில் வசிக்கும் எம். ராஜேஷ் கர்ப்பிணிகள் மற்றும் மருத்துவ அவசரங்களுக்கு தனது டாக்சியை இலவசமாக கொடுத்து உதவி வருகிறார்.
கொரோனா பரவல் பிற மாவட்டங்களை விட சென்னையில் மிக அதிகமாக உள்ளது. இதனால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மருத்துவ சேவை தேவைப்படுவோர் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். காரணம் அவர்களுக்குரிய வாகன வசதி உள்ளிட்டவை கிடைக்கவில்லை என்பதால். இந்த சூழலில்தான் சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த எம். ராஜேஷ் என்பவர் மகத்தான சேவை ஒன்றை செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வணக்கம். எனது பெயர் M.ராஜேஷ் சென்னை பல்லாவரம் அருகில் உள்ள அனகாபுத்துரில் வசிக்கிறேன். எங்கள் நிறுவனம் Lakshmi Travels.
நாங்கள் ஊரடங்கு உத்தரவு காலத்தில் சென்னையில் வசிக்கும் கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு மருத்துவ மனைக்கு செல்ல எங்கள் நிறுவனம் சார்பில் இலவச கார் சேவை அளிக்கின்றோம். எங்கள் சேவையை சென்னை எல்லைக்குள் மட்டும் கொடுக்கிறோம்.
மேலும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் மற்ற மாவட்டம் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு சிகிச்சைக்கு செல்ல குறைந்த வாடகைக்கு கார் வாடகைக்கு தருகிறோம். இதுவரை சென்னையில் சுமார் 25 கர்ப்பிணி பெண்கள் எங்கள் இலவச சேவை மூலம் பயன் பெற்றுள்ளனர். சென்னையில் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல ஒரு ரூபாய் கூட வாங்குவதில்லை என்று கூறியுள்ளார்.
ராஜேஷின் தொடர்பு எண்கள்: 7358219119, 8608321662












Click it and Unblock the Notifications