நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ.18 கோடி வீட்டுமனை பட்டா.. வாழ்க்கையில் திருப்பம்.. அரசு ஸ்வீட் நியூஸ்
சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய்த்துறை சார்பாக, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டம், கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி மற்றும் அரசுப் பண்ணை, மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாக்களில் 158 நரிக்குறவர் பிரிவு பயனாளிகள் உட்பட்ட மொத்தம் 299 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகளை வழங்கினார்.
சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை அருகே அமைந்துள்ள கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி பகுதியில், நரிக்குறவர் பிரிவைச் சேர்ந்த 158 குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றன.

சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த பழங்குடியினர் சமூகத்தினருக்கு, காலம் காலமாக அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளன.
டாக்டர் கலைஞர் - நரிக்குறவர்
முதலமைச்சராக கலைஞர் இருந்த காலகட்டத்தில், "நரிக்குறவர்" என்ற சொல்லை பயன்படுத்துவது கண்ணியக் குறைவு என கருதி, அவர்களை மரியாதையுடன் "நறி தவறாதவர்கள், நரிக்குறவர்கள்" என்று அழைக்க வேண்டும் என பெயர்ச்சொல் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் சமூக மரியாதையும் அடையாளமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், 1980ம் ஆண்டு இப்பகுதியில் வசித்து வந்த நரிக்குறவர் மக்களுக்கு முதன்முறையாக வாக்குரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அவர்கள் ஜனநாயகப் பண்பாட்டில் முழுமையாக இணைக்கப்பட்டனர்.
தமிழக அரசு வீடு
அந்த காலகட்டத்தில், இப்பகுதி மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வந்த காரணத்தால், அடிக்கடி தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. இதனை கருத்தில் கொண்டு, குடிசை வீடுகளுக்கு மாற்றாக ஹாஸ்பெடாஸ் ஓடுகள் பதித்த வீடுகள் கட்டி வழங்க அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது, கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் மக்களுக்கு நிரந்தர குடியிருப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில், 158 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடமாகும். முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு உரிய தடையின்மைச் சான்று பெற்று, ரூ.18 கோடி மதிப்பிலான இந்த இடத்தை நரிக்குறவர் மக்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டாக்களாக வழங்கியுள்ளது.
பட்டா தந்த அமைச்சர்
அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய்த்துறை சார்பில், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டத்திற்கு உட்பட்ட கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி மற்றும் அரசுப் பண்ணை, மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்று, நரிக்குறவர் பிரிவு பயனாளிகள் 158 பேர் உட்பட மொத்தம் 299 பயனாளிகளுக்கு இந்த இலவச வீட்டுமனை பட்டா ஆணைகளை வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முதலமைச்சர் மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு எண்ணற்ற அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பழங்குடியினர் சமூக மக்களான நரிக்குறவர்கள் நலனுக்காக குடியிருப்பு வசதி, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்ற அரசால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
இந்த இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம், நரிக்குறவர் மக்களுக்கு நிரந்தர வாழ்விடத்தையும் பாதுகாப்பான எதிர்காலத்தையும் உறுதி செய்யும் முக்கியமான முயற்சியாக கருதப்படுகிறது.
அண்ணா பல்கலை இடம்
சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை அருகே உள்ள கோட்டூர்புரம் பகுதியில் 158 நரிக்குறவர் குடும்பமாக வசித்து வருகிறார்கள். தற்போது, கோட்டூர்புரம், ஜிப்ஸ் காலனி பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு நிரந்தர இருப்பிடம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் 158 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடமாகும்.
முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசின் மூலம் உரிய தடையின்மைச் சான்று பெறப்பட்டு 18 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் இப்பகுதி மக்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டாக்களாக வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications