கல்லூரி மாணவர்களுக்கான லேப்டாப் திட்டம்.. ஜனவரி 5ல் தொடங்கி வைக்கும் ஸ்டாலின்!
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2,000 கோடி மதிப்பில் 10 லட்சம் லேப்டாப்கள் தமிழக அரசு சார்பாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. இதன்பின் கொரோனா பரவல் காரணமாக இலவச லேப்டாப் திட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் இலவச லேப்டாப் திட்டம் மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டிலேயே வெளியானது.

இதையடுத்து டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டு, டெல், ஏசர் மற்றும் எச்பி ஆகிய 3 நிறுவனங்களிடம் இருந்து லேப்டாப் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்தது. மொத்தமாக ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் 10 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேவையென்றால் கூடுதல் நிதியும் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
ஒரு லேப்டாப்பின் விலையாக ரூ.20 ஆயிரம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கு (AI) ஏற்றவாறு, அதிவேக Processor மற்றும் நீண்டநேரம் தாங்கும் பேட்டரி, ஹார்ட் டிஸ்க் என அத்தனை நவீன தொழில்நுட்பங்களுடன் தமிழக அரசு கொடுக்கும் லேப்டாப்பில் இருக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
இதனிடையே இன்று காலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு வழங்கப்பட உள்ள இலவச லேப்டாப் திட்டம் புத்தாண்டு விடுமுறைக்கு பின் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். லேப்டாப் திட்டத்துடன் சேர்த்து Preplexity Pro AI வசதியும் 6 மாதங்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் உயர் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் இலவச லேப்டாப் திட்டம் ஜனவரி 5ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதிக்குள் அத்தனை மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டுவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications