இன்றும் இலவசம்.. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க முண்டியடிக்கும் கூட்டம்
இன்றும் மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசமாக மக்கள் பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் கடந்த 10-ம் தேதி முதல் சேவை துவங்கப்பட்டது.
சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், பரங்கி மலையிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை 2-வது வழித்தடத்திலும் என ரயில் சேவை முடிவடைந்து, 32 ரயில் நிலையங்கள் உள்ளன.

விழிப்புணர்வு
ஒவ்வொரு முறை மெட்ரோ ரயில் சேவை புதிதாக துவங்கும்போது, இலவச பயணம் என்ற அறிவிப்பை வெளியிடும். அதுபோலேவே இந்த முறையும், பயணிகளை கவரும் விதமாகவும், பொதுமக்களிடையே மெட்ரோ ரயில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த 3 தினங்களாக மெட்ரோ ரயிலில் பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

குழந்தைகள்
இந்த அறிவிப்பு சென்னைவாசிகளை வெகுவாக ஈர்த்தது. இதனால் 3 நாட்களாகவே மெட்ரோ நிலையங்களிலும் கூட்டம் நிறைந்து வழிந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் என ஏராளமானோர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டினர்.

4-வது நாள்
இந்த 3 நாளில் மட்டும் இலவசமாக பயணம் செய்தவர்கள் 3 லட்சம் பேருக்கு மேல் என கூறப்படுகிறது. மக்களின் இந்த ஆர்வத்தை கண்ட மெட்ரோ நிர்வாகம், இன்றும் அதாவது 4-வது நாளாக மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

மக்கள் கூட்டம்
இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இப்போதே மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தலை தென்பட ஆரம்பித்துள்ளது.
-
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள்












Click it and Unblock the Notifications