நண்பர்கள் காட்டிய தவறான பாதை... சபலத்தில் சிக்கி சகதியில் விழுந்த சஞ்சீவி
சென்னை: நண்பர்கள் காட்டிய தவறான பாதையால் சென்னை விடுதி உரிமையாளர் சஞ்சீவி சபலத்தில் பெரும் பிரச்சினையில் சிக்கிக் கொண்டார்.
திருச்சியைச் சேர்ந்தவர் சஞ்சீவி. பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இவர் கட்டுமான தொழில் செய்து வந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்படவே சென்னைக்கு குடிபெயர்ந்தார்.
இதையடுத்து சென்னையிலும் கட்டுமானத் தொழிலை ஆதம்பாக்கம் தில்லை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொடங்கினார். அப்போதே ஓட்டல், ரியல் எஸ்டேட் தொழில் என செய்து வந்துள்ளார்.

புலம்பல்
பெண்கள் விஷயத்தில் வீக்கான இவர் பெங்களூர், மும்பை ஆகிய இடங்களுக்கு உல்லாசமாக இருக்க பெண்களை அழைத்து சென்று நட்சத்திர விடுதிகளில் தங்குவது, என பணத்தை வாரி இறைத்தார். இதனால் அவர் கட்டி வைத்திருந்த சாம்ராஜ்யம் நொருங்கியது. கடன் கழுத்தை நெரித்தது. இதனால் சோர்வடைந்து எப்போதும் நண்பர்களிடம் புலம்பி கொண்டே இருப்பாராம்.

பெண்கள் தங்கும் விடுதி
எனினும் கடன் வந்து விட்டதே என இல்லாமல் பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லையே என புலம்புவாராம். இதனால் நண்பர்களும் ஒரு ஆலோசனை வழங்கினர். உல்லாசமாக இருக்க வேண்டும், ஆனால் காசு செலவு செய்யக் கூடாது. அதற்கு தகுந்தபடி அவர்கள் கொடுத்த ஐடியாதான் இந்த பெண்கள் தங்கும் விடுதி.

நண்பர்கள் ஐடியா
இந்த விடுதிகளில் தங்கும் பெண்களை ரகசிய கேமரா மூலம் வீடியோவாக எடுத்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவிப்பது என்பதே அவர்கள் கொடுத்த திட்டம். அங்கு தங்கும் பெண்கள் வாடகையாக ஒரு தொகையை அளிப்பர். இதன் மூலம் பண கஷ்டமும் தீரும் என்பதே நண்பர்கள் கொடுத்த ஐடியா.

கைது
நண்பர்கள் ஆலோசனைக்கு கேற்ப சென்னை ஆதம்பாக்கத்தில் தில்லை நகரில் பெண்கள் விடுதியை தொடங்கினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு குளியல் அறை, படுக்கை அறை ஆகியவற்றில் ரகசிய கேமராவை பொருத்தியிருந்தார். இதை அங்கு தங்கியிருந்த பெண்கள் கண்டுபிடித்து போலீஸில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சஞ்சீவி கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications