ஆதார் +பாஸ்போர்ட் +ரூபாய்! எல்லாத்தையும் மாற்றனும்! இந்தியா பெயரை மாற்றினால் என்ன நடக்கும் தெரியுமா
சென்னை: இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் அதன் பின் பல்வேறு முக்கியமான ஆவணங்கள் பலவற்றின் பெயரையும் மாற்ற வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்படும்.
இந்தியாவின் பெயர் பாரத குடியரசு என்று மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. நேற்றில் இருந்து இந்தியா முழுக்க இது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டத்தை சீர்திருத்தி இந்தியா என்பதை நீக்கி வெறும் பாரத் என்பதை பயன்படுத்த முடிவு எடுக்கப்படலாம். இப்போது இந்தியா, அதாவது பாரத் என்று உள்ளது. இதை இந்தியா என்று மட்டும் மாற்ற பாஜக அரசு முடிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது.

மத்திய பாஜக அரசு இதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பாரத குடியரசுத்தலைவர் என குடியரசுத்தலைவர் மாளிகை அழைப்பிதழ் அளித்துள்ளதும் இந்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜி.20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அழைப்பிதழில் பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்ட தொடர் நடக்க உள்ளது. இந்த நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடரில் பாரத குடியரசு என மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 18 - 22 வரை இந்த சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று(செப்.6) நடைபெறுகிறது. இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை காரணமாக பின்வரும் பாதிப்புகள் ஏற்படலாம்.
▪️இது உங்கள் அனைத்து ஆவணங்களையும் நாணயங்களையும் செல்லாததாக்கும்.
▪️ அதாவது ஆதார் தொடங்கி இந்தியா என்ற பெயர் உள்ள ஆவணங்களான பாஸ்போர்ட் வரை எல்லாம் செல்லாததாகும்.
▪️ இந்த ஆவணங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
▪️அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை உங்களை வரிசையில் நிற்க வைக்கும். DEMONETISATION சமயத்தில் நீங்கள் செய்ததைப் போன்ற அலுவலகங்கள் முன் நிற்க வேண்டி இருக்கலாம்.
▪️இது கோடிக்கணக்கான வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கும்.
▪️இது 140 கோடி இந்தியர்களின் புதிய ஆவணங்களை மீண்டும் உருவாக்கும் நேரத்தை ஏற்படுத்தும். இதனால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாக்குவார்கள்.
▪️ ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களின் பெயர்கள் மாறும். இதனால் அங்கே உள்ள பழைய ஆவணங்களின் பெயர்கள் மாறும்.
▪️ பல கோப்புகள் மொத்தமாக செல்லாமல் ஆகும்.
▪️ சர்வதேச அரங்குகளில் மீண்டும் பாரத் என்ற பெயரை பிராண்ட் செய்ய வேண்டும். முதலீட்டு ரீதியாக இது பாதிப்பை ஏற்படுத்தும்.
▪️வெளிநாட்டு முதலீடுகள் வருவதில் முதல் சில மாதங்கள் பாதிப்புகள் ஏற்படலாம்.
▪️இது அரசு அலுவலகங்களில் ஊழலைச் அதிகரிக்கும். ஆவணங்களில் பெயர்களை மாற்ற வரும் மக்களிடம் லஞ்சம் வாங்க வாய்ப்புகள் உள்ளன.
▪️பாரத் என்ற பெயரை மாற்றும் பட்சத்தில் வெளிநாட்டில் படிக்கும் இந்திய பாஸ்போர்ட் கொண்டவர்கள் அதிகம் சிரமத்திற்கு உள்ளவர்கள். இதனால் தொடக்கத்தில் இந்தியா என்ற பெயர் சில காலம் அமலில் இருக்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகலாம்.
-
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!











Click it and Unblock the Notifications