Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி முதல் கருணைத் தொகை வரை! அதிமுக கொடுத்த 17 வாக்குறுதிகள் யாவை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி முதல் கருணைத் தொகை ரூ 10000 வரை, வரும் சட்டசபை தேர்தலுக்கு அதிமுக இதுவரை வழங்கிய வாக்குறுதிகளை பார்க்கலாம்.

அதிமுக தேர்தல் வாக்குறுதி குறித்த அறிவிப்புகள், முதல் கட்டமாக கடந்த ஜனவரி 17ஆம் தேதியும், 2ஆம் கட்டமாக பிப்ரவரி 4- ஆம் தேதியும், 3-ஆம் கட்டமாக இன்றைய தினம் (பிப்.24) வெளியானது.

tamil nadu assembly election 2026

முதல் கட்ட அறிக்கை

  • மகளிர் நலன்: சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்க, 'குலவிளக்கு' திட்டம் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ.2,000 வழங்கப்படும். குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் இத்தொகை செலுத்தப்படும்.
  • ஆண்களுக்கும் இலவச பேருந்துப் பயணம்: நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கும் இலவச பேருந்துபயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
  • அம்மா இல்லம்' திட்டம்: 'அம்மா இல்லம்' திட்டம் மூலம் கிராமப்புறங்களில் குடியிருக்க சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி இலவசமாக வழங்கப்படும். பட்டியலின மக்கள் ஒரே குடும்பத்தில் வசிக்கும் நிலையில், அவர்களது மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்லும்போது, அரசே இடம் வாங்கி, கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
  • 150 நாள் வேலை: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

அம்மா இருசக்கர வாகனம்: 5 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 'அம்மா இருசக்கர வாகனங்கள்' வழங்கப்படும்.

இரண்டாம் கட்ட அறிக்கை

  • முதியோருக்கு ஓய்வூதியம் ரூ 2 ஆயிரம் வழங்கப்படும்.
  • சிறுபான்மையினர் பெற்ற கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சம் வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் படுகாயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும்.
  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
  • இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
  • மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

மூன்றாவது கட்ட அறிக்கை

  • திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள விலை உயர்வு, மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை ஈடுகட்ட அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 10000 ஒரு முறை வழங்கப்படும்.
  • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டதாரிகளுக்கு மாதம் ரூ 2000. பிளஸ் 2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ 1000.
  • பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ 1000 வழங்கப்படும்.
  • விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக இலவச மின்சாரம் வழங்கப்படும்.
  • மீன் பிடி தடைக்கால நிவாரணம் ரூ 8 ஆயிரத்தில் இருந்து ரூ 12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • நகர்ப்புற நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் ரத்து செய்யப்படும். இவ்வாறு 17 வாக்குறுதிகளை இதுவரை அதிமுக கொடுத்துள்ளது.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+