சமையல் எண்ணெய் இனி பாக்கெட்களில் மட்டுமே... ஜூன் 1-ம் தேதி முதல் சில்லறையாக வாங்க முடியாது
சென்னை: சமையல் எண்ணெயை ஜூன் 1-ம் தேதி முதல் பாக்கெட்களில் மட்டுமே விற்க வேண்டும் என்றும், சில்லறையாக விற்க கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமையல் எண்ணெயில் கலப்படம் தொடர்பான புகார்கள் உணவு பாதுகாப்புத் துறைக்கு குவிந்ததால் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது தமிழக அரசு. தற்போது கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் உள்ள ஆயில் ஸ்டோர்களில் சமையல் எண்ணெய், நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள் தேவைப்படுவோருக்கு சில்லறையாக விற்கபடுகின்றன.

ஒரு லிட்டர் எண்ணெய் வாங்க முடியாதோர் தங்கள் பாத்திரத்தை எடுத்து சென்று 200 மி.லி., 300 மி.லி. என்று தங்கள் வசதிக்கேற்றவாறு ஆயில் ஸ்டோர்களிலும், மளிகைக்கடைகளிலும் எண்ணெய் வாங்கி செல்வார்கள். இப்போது இந்த நடைமுறை ஜூன் 1-ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இதற்கு எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு உத்தரவுப்படி இனி சமையல் எண்ணெய் வகைகளை பாக்கெட்களில் அடைத்து, சீலிட்டு விற்பனை செய்ய வேண்டும். இதன்மூலம் கலப்படம் மற்றும் போலி தயாரிப்புகளை ஒழிக்க முடியும் என்பது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை சிறு வணிகர்களை பாதிக்கும் என்றும், அனைவராலும் பேக்கேஜிங் உரிமம் வாங்க முடியாது எனவும் எண்ணெய் விற்பனையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பழைய முறைப்படி மீண்டும் செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில் தமிழகத்தில் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், அதனை அடியோடு இந்த உத்தரவு பாதிக்கச்செய்யும் என்பதும் அவர்களின் வாதமாக உள்ளது. இதனிடையே பொதுமக்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், எண்ணெய் பாக்கெட்களை இனி 250 மி.லி. , 500 மி.லி. என்ற அளவில் கூட பேக் செய்து வாங்குவோரின் வசதிக்கேற்ப விற்பனை செய்ய எண்ணெய் உற்பத்தியாளர் முன்வர வேண்டும் என உணவுப் பாதுகாப்பு துறை கேட்டுக்கொண்டுள்ளது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications