காலையில் காய்கறி மார்க்கெட் போனவர்களுக்கு ஷாக்.. நெரிக்கும் முருங்கை விலை.. கலங்க வைத்த வெங்காயம்
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு முருங்கைக்காய் ₹ 50 முதல் ₹ 55 வரையிலும், 1 கிலோ ₹ 400 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மழை மற்றும் வரத்து குறைவால் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர். சில்லறை விற்பனையில் 1 கிலோ ₹ 500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் மழை பெய்து வருவதால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் எச்சரித்து உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான்

இன்றைய காய்கறி விலை நிலவரம்:
பெங்களூர் தக்காளி 1 கிலோ ₹ 70.00
பீன்ஸ் 1 கிலோ ₹ 68.00
பீட்ரூட் 1 கிலோ ₹ 45.00
பாகற்காய் 1 கிலோ ₹ 80.00
சுரைக்காய் 1 கிலோ ₹ 35.00
கத்தரி 1 கிலோ ₹ 40.00
அகன்ற பீன்ஸ் 1 கிலோ ₹ 100.00
முட்டைக்கோஸ் 1 கிலோ ₹ 20.00
கேப்சிகம் 1 கிலோ ₹ 60.00
கேரட் 1 கிலோ ₹ 90.00
காலிஃபிளவர் 1 துண்டு ₹ 25.00
கொத்தமல்லி இலைகள் 1 கொத்து ₹ 20.00
வெள்ளரி 1 கிலோ ₹ 30.00
முருங்கை 1 கிலோ ₹ 400.00
இஞ்சி 1 கிலோ ₹ 210.00
பச்சை மிளகாய் 1 கிலோ ₹ 40.00
பச்சை வாழைப்பழம் 1 துண்டு ₹ 16.00
அவரை 1 கிலோ ₹ 60.00
புதினா 1 கொத்து ₹ 70.00
வெங்காயம் (பெரியது) 1 கிலோ ₹ 80.00
வெங்காயம் (சிறியது) 1 கிலோ ₹ 100.00
வாழைப்பூ 1 கிலோ ₹ 30.00
வாழைத்தண்டு 1 துண்டு ₹ 30.00
உருளைக்கிழங்கு 1 கிலோ ₹ 50.00
பூசணி 1 கிலோ ₹ 50.00
முள்ளங்கி 1 கிலோ ₹ 50.00
முருங்கைப்பூ 1 கிலோ ₹ 50.00
ஸ்கார்லெட் பூசணி 1 கிலோ ₹ 50.00
புடலங்காய் 1 கிலோ ₹ 30.00
உருளைக்கிழங்கு 1 கிலோ ₹ 110.00
கடந்த 2 வாரமாக வெங்காய விலையும் நாளுக்கு நாள் உயர்ந்த நிலையில் இன்றும் உயர்ந்து உள்ளது. . மகாராஷ்டிராவில் பருவமழை தாமதம், தேவை அதிகரிப்பு மற்றும் காலதாமதம் காரணமாக வெங்காயத்தின் விலை தமிழ்நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டிலும் மழை விடாமல் பெய்வதும் காய்கறி விலை உயர்விற்கு காரணமாகி உள்ளது.
வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ₹ 50ல் இருந்து தற்போது ₹ 90 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து சீரான ஏற்றுமதிகள் உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து வர வேண்டிய ஒரு பகுதி இன்னும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. இதன் காரணமாக சில்லறை விற்பனையாளர்கள் வெங்காயம் இன்றி சிக்கலில் மாட்டி உள்ளனர்.
மழை: மழை காரணமாக தமிழ்நாட்டில் மேலும் வெங்காய விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. காற்றழுத்த தாழ்வு காரணமாக 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் புதுக்கோட்டை இடங்களில் கனமழை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு பெய்யவாய்ப்புள்ளது.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications