"இது டீசர்தான்".. கிஷோர் முதல் நாகராஜன் வரை.. 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்.. பரபரக்கும் பின்னணி!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து முக்கிய குற்றவாளிகள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்து வருகிறது. வரிசையாக 3 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்து உள்ள நிலையில், இன்னும் சிலர் விரைவில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என்று கூறுகிறார்கள்.
Recommended Video
தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 எனப்படும் குண்டாஸ் சட்டம் தமிழ்நாட்டில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போடப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் கடத்துவது தொடங்கி சமூக விரோத கருத்துக்களை தெரிவித்து வன்முறையை தூண்டும் நபர்கள் வரை பலர் மீது குண்டாஸ் சட்டம் போடப்படுவது வழக்கம்.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், ஒரு வருடம் கண்டிப்பாக ஜெயிலில் இருக்க வேண்டும். பெயில் கிடைக்காது. அதோடு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்த வேண்டியது இல்லை.

தமிழ்நாடு
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அடுத்தடுத்த மூன்று பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. முதலில் கிஷோர் கே சாமி மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டது. அதன்பின் பத்மா சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, அதன்பின் தற்போது தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

ஒற்றுமை
இவர்கள் மூவருக்கும் இடையில் இருக்கும் ஒரு ஒற்றுமை, மூன்று பேருமே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிக்கியவர்கள். ராஜகோபாலன், நாகராஜன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இன்னொரு பக்கம் கிஷோர் கே சாமி மீது பெண் பத்திரிக்கையாளர்களை பாலியல் ரீதியாக விமர்சித்த புகார் உள்ளது. இவர்கள் மூன்று பேரும் அடுத்த ஒரு வருடம் வெளியே வர முடியாது.

சிக்கல்
இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிராக யார் தவறு செய்தாலும், அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள், அவர்கள் மீது குண்டாஸும் பாயும் வாய்ப்பு உள்ளது என்பதையே இந்த கைதுகள் காட்டி இருக்கின்றன.

கைது தொடரும்?
இது போக மேலும் சிலர் மீது வரும் நாட்களில் குண்டாஸ் பாயும் என்கிறார்கள். இப்போது வரை பாய்ந்து உள்ள கைது எல்லாம் டீசர், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிக்கியவர்கள் கண்டிப்பாக குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். சாட்டை துரைமுருகன், பப்ஜி மதன், சிவசங்கர் பாபா ஆகியோர் மீதும் விரைவில் குண்டாஸ் பாயும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications