“ரத்த” நிறத்தில் நிலா.. சூரியனுக்கு பின் வானில் நிகழும் “மேஜிக்” - நவம்பரில் முழு சந்திர கிரகணம்
சென்னை: அண்மையில் உலகம் முழுவதும் பகுதி சூரிய கிரகணம் தோன்றிய நிலையில் வரும் நவம்பர் மாதம் முழு சந்திர கிரகணம் தென்பட இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
சூரியனின் சுற்று வட்டப்பாதையில் பூமி உள்ளிட்ட 8 கோள்கள் சூரியனையும் சுற்றி வருகின்றன. அதேபோல் நிலாவும் பூமியை சுற்றி வருகிறது.
ஒரு கட்டத்தில் பூமியும், சூரியனும், சந்திரனும் நேர்கோட்டுக்கு வரும்போது நாம் அதை கிரகணம் என்று அழைக்கிறோம். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் கடந்த 25 ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது.

கிரகண காலம்
சூரியனுக்கு பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலா நகர்ந்து செல்லும்போது சூரியனின் ஒருபகுதி மறைந்து பிறைபோன்ற வடிவில் தெரிந்தது. இதைதான் விஞ்ஞானிகள் சூரிய கிரகணம் என்று அழைக்கின்றனர். ஒரு கிரகண காலம் என்பது சுமார் 35 நாட்கள் என்று கூறப்படுகிறது.

முழு சந்திர கிரகணம்
இந்த காலத்தில் 2 கிரகணங்கள் ஏற்படும். சில சமயங்களில் 3 கிரகணங்கள் கூட ஏற்படலாம். இந்த நிலையில் தான் வரும் நவம்பர் 8 ஆம் தேதி இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் வானில் ஏற்பட இருக்கிறது. 35 நாட்களுக்குள் நிகழும் 2 வது கிரகணமாக இது பார்க்கப்படுகிறது.

ரத்த சிவப்பு நிலா
முழு சந்திர கிரகணம் என்பது பூமியுடைய நிழலின் இருண்ட பகுதிக்குள் முழு சந்திரனும் வரும் நிகழ்வு. அம்ப்ரா என்று அழைக்கப்படும் இந்த சந்திர கிரணத்தின் விளைவாக சந்திரன் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

உலக நாடுகள்
இந்த முழு சந்திர கிரகணத்தை ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலும், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபில் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் பகுதிகளிலும் காண முடியும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் தெரியுமா?
இந்தியாவிலும் இந்த சூரிய கிரணத்தை நம்மால் பார்க்க முடியும். குறிப்பாக கடந்த முறை சூரிய கிரகணம் குறைவான நேரம் தென்பட்ட மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு இந்திய பகுதிகளில் முழு சந்திர கிரகணத்தை தெளிவாக காண முடியும். மற்ற பகுதிகளில் பகுதி சந்திர கிரகணத்தை மட்டுமே பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

நேரம்
இந்திய நேரப்படி நவம்பர் 8 ஆம் ஆண்டு பிற்பகம் 2:48 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம் மாலை 6:19 மணி வரை தென்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றார்கள். அதே நேரம் சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்க கருவிகள் இருப்பதைபோல் முழு சந்திர கிரகணத்தை பார்த்து ரசிக்க கருவிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கிரகணம்
கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் பகுதி சூரிய கிரகணம் தோன்றிய நிலையில் வரும் நவம்பர் 8 ஆம் தேதி தோன்றும் சந்திர கிரகணமே 2022 ஆம் ஆண்டின் கடைசி கிரகணமாக உள்ளது. இதற்கு பின் 5 ஆண்டுகள் கழித்து 2027 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2 ஆம் தேதி அடுத்த சூரிய கிரகணம் நிகழும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications