பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகிற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரசு மரியாதை வழங்கப்படும் என்றும், அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்த "இயக்குநர் இமயம்" பாரதிராஜாவின் மறைவு திரையுலகை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது கலைப்பணிக்கு மரியாதை செலுத்தும் வகையில், பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

Full State Honours for Bharathiraja CM Vijay Makes Official Announcement

முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

கடந்த ஒரு மாத காலமாக வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா பின்னர் வீடு திரும்பினார். மீண்டும் உடல்நிலை சரியில்லாததால் நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்தவாரு அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இந்த தகவல் வெளியானதும் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் விஜய்யும் டெல்லி பயணத்திற்கு முன்பாக நேரில் சென்று பாரதிராஜாவின் உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவித்தார்.

16 வயதினிலே திரைப்படம்

தமிழ் திரையுலகில் பாரதிராஜா ஆற்றிய பங்களிப்பு அளவிட முடியாதது. 1977-ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை கிராமத்து மண்ணின் வாசனை நோக்கி திருப்பியவர் அவர். ஸ்டுடியோக்களை தாண்டி இயற்கை சூழலில் படப்பிடிப்புகளை நடத்தி தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கினார்.

ராதிகா, ராதா, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியதோடு, 'கிழக்கே போகும் ரயில்', 'மண்வாசனை', 'முதல் மரியாதை', 'கடலோரக் கவிதைகள்', 'கிழக்குச் சீமையிலே' உள்ளிட்ட பல வெற்றி படங்களை வழங்கியுள்ளார். இந்திய சினிமாவுக்கான அவரது பங்களிப்பை பாராட்டி பத்மஸ்ரீ உள்ளிட்ட பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அவருக்கு வழங்கப்படும் அரசு மரியாதை, அவரது கலைச் சாதனைகளுக்கான மிக உயரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்

முதல்வர் ஜோசப் விஜய்யின் இந்த அறிவிப்பை திரையுலகினரும் ரசிகர்களும் வரவேற்றுள்ளனர். சமூக வலைதளங்களிலும் பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன். கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள். தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+