Bhagyaraj Eye donation: இறந்தும் உலகை பார்க்கும் பாக்யராஜ்! கண்களை தானம் செய்து நெகிழ்ச்சி
சென்னை: மறைந்த பாக்யராஜின் கண்கள் தானமாக வழங்கப்படுகிறது. இதற்காக சென்னையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம் வீட்டிற்கு மருத்துவக் குழுவினர் வருகை தந்துள்ளனர்.
பாக்யராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

பாக்யராஜின் குருநாதர் பாரதிராஜா காலமானதும் பாக்யராஜ் உடைந்து போய்விட்டார். இதுவரை பாரதிராஜா என்று எங்குமே குறிப்பிடாமல் இயக்குநர், குருநாதர் என்றே அழைத்திருக்கிறார்.
பாரதிராஜா இறந்ததும் அவரது உடல் தேனியில் நல்லடக்கம் செய்யப்படும் வரை பாக்யராஜ் சோகத்தில் மூழ்கியிருந்தார். அந்த காரியங்களை முடித்துவிட்டு அவர் சென்னை திரும்பிய போதும் பாரதிராஜாவின் மறைவிலிருந்து அவரால் மீள முடியவில்லை என்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் வள்ளுநர் கோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டாராம். அப்போது வீடு திரும்பிய அவர் தனக்கு லேசாக நெஞ்சு வலிக்கிறது என கூறி சோஃபாவில் அமர்ந்தாராம்.
அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மயங்கிய நிலையில் சுயநினைவை இழந்து காணப்பட்டாராம். அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, இன்று போய் நாளை வா, சின்ன வீடு, டார்லிங் டார்லிங் டார்லிங் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கி நடித்தார்.
அவரது குடும்ப பாங்கான கதை, நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான திரைக்கதைகளால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
கிழக்கே போகும் ரயில் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன் கவுண்டமணியுடன் அந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார். பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்திலும் இரு காட்சிகளில் நடித்திருந்தார்.
அந்த படத்திற்கு வசனமும் எழுதியிருந்தார். புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தா மட்டுமில்லாமல் கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.இதையடுத்து சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற படத்தை முதல் முதலில் 1979 ஆம் ஆண்டு இயக்கினார். இதையடுத்து ராஜேஷ் கதாநாயகனாக நடித்த கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருந்தார்.
மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா ஆகியவை பாக்யராஜின் வெற்றிப் படங்களாயின. விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தைப் பாக்யராஜ் இயக்கி நடித்தார். பாக்யராஜ் தனது முத்திரையை முழுமையாகப் பதிந்து வெற்றி ஈட்டிய திரைப்படங்களாக அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்றவை கருதப்படுகின்றன.
டார்லிங், டார்லிங், டார்லிங் வெற்றிப்படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். 1982 ஆம் ஆண்டு முந்தானை முடிச்சு, படத்தில் ஊர்வசியை அறிமுகம் செய்தார்.
இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100 படங்களில் நடித்தும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 25 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தனது மகன், மகளை திரைத்துறையில் ஜொலிக்க வைக்க முயன்று அது முடியாமல் போனது.












Click it and Unblock the Notifications