சாதிய ரீதியாக பாகுபாடு காட்டியது கிடையாது.. மணீஷ் நரவனே நல்ல அதிகாரி.. ககன் தீப் சிங் பாராட்டு
சென்னை: தன் மீது சாதிய வன்கொடுமை புகார் கூறிய ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணிஷ் நரவனே சிறந்த அதிகாரி என மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் சுகாதாரத் துறை செயலாளருமான ககன் தீப் சிங் பேடி பாராட்டியிருந்தார்.
சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ககன்தீப் சிங் பேடி தன்னை சாதிய ரீதியில் துன்புறுத்தியதாக ஈரோடு கூடுதல் ஆட்சியர் டாக்டர் மணீஷ் நரவனே பரபரப்பு குற்றச்சாட்டை அளித்திருந்தார். இது குறித்து தலைமைச் செயலாளருக்கு அவர் 2 பக்க புகார் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அந்தப் புகாரில் நான் டாக்டர் மணீஷ் நரவனே தற்போது ஈரோடு கூடுதல் ஆட்சியராக உள்ளேன். நான் சென்னை மாநகராட்சியில் துணை சுகாதார ஆணையராக இருந்த போது ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன். கடந்த ஜூன் 14 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி வரை நான் அந்த பதவியில் இருந்தேன்.
அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி என்னை சாதி ரீதியில் பாகுபாடு காட்டி துன்புறுத்தினார். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டே என்னை வெகுவாக அடக்குமுறைக்கு ஆளாக்கினார். பணி நிமித்தமாக என்னை மிகவும் துன்புறுத்தினார். கோப்புகளில் கையெழுத்திடுவதை தாமதப்படுத்தினார்.
ஒரு கையெழுத்துக்காக இரவு வெகு நேரம் காத்திருக்கச் செய்வார். ஒரு வழியாக இரவில் காத்திருந்து அவரிடம் கோப்புகளில் கையெழுத்து வாங்க சென்றால் தம்பி இப்போது லேட் ஆகிவிட்டது. நாளை பார்த்துக்கலாம் என்பார். இது தினமும் நடந்தது. எனக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஜெ ராதாகிருஷ்ணனுக்கும் இடையே விரிசல் ஏற்படச் செய்தார். அவருடைய கொடுமைகள் தாங்காமல் நான் மன அழுத்தத்திற்கு சென்றேன். ஒரு கட்டத்தில் நான் அவரிடம் சொல்லியும் அதை அவர் பொருட்படுத்தாததால் தற்கொலைக்கு முடிவு செய்தேன். என் தந்தைதான் என்னை தேற்றி ஊக்கப்படுத்தினார்.
ககன் தீப் சிங் செய்த கொடுமைகள் எல்லாம் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது என தனது புகாரில் மணீஷ் தெரிவித்துள்ளார். அனைத்து இடங்களிலும் நேர்மையான அதிகாரி, நல்ல அதிகாரி என பெயர் பெர்ர ககன்தீப் சிங் மீது இப்படியொரு புகாரா என அதிர்ச்சி ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ் இந்து நாளிதழுக்கு ககன்தீப் கூறுகையில் மணீஷ் நல்ல அதிகாரி, அவரின் கடிதத்தை நான் படித்தேன்.
அவருடைய கடிதம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கொரோனா காலத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றினார். சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய காலத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றினார். அவருடைய பணிகளை பாராட்டி நான் சான்றிதழ்களை அளித்துள்ளேன். அவருடைய சர்வீஸ் ரெக்கார்டு என அழைக்கப்படும் பணி பதிவேட்டில் அவர் சிறப்பாக பணியாற்றினார் என பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தேன். யாரும் ஒரு போதும் சாதிய ரீதியாக பாகுபாடு காட்டியது கிடையாது என விளக்கமளித்துள்ளார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications