சாதிய ரீதியாக பாகுபாடு காட்டியது கிடையாது.. மணீஷ் நரவனே நல்ல அதிகாரி.. ககன் தீப் சிங் பாராட்டு
சென்னை: தன் மீது சாதிய வன்கொடுமை புகார் கூறிய ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணிஷ் நரவனே சிறந்த அதிகாரி என மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் சுகாதாரத் துறை செயலாளருமான ககன் தீப் சிங் பேடி பாராட்டியிருந்தார்.
சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ககன்தீப் சிங் பேடி தன்னை சாதிய ரீதியில் துன்புறுத்தியதாக ஈரோடு கூடுதல் ஆட்சியர் டாக்டர் மணீஷ் நரவனே பரபரப்பு குற்றச்சாட்டை அளித்திருந்தார். இது குறித்து தலைமைச் செயலாளருக்கு அவர் 2 பக்க புகார் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அந்தப் புகாரில் நான் டாக்டர் மணீஷ் நரவனே தற்போது ஈரோடு கூடுதல் ஆட்சியராக உள்ளேன். நான் சென்னை மாநகராட்சியில் துணை சுகாதார ஆணையராக இருந்த போது ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன். கடந்த ஜூன் 14 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி வரை நான் அந்த பதவியில் இருந்தேன்.
அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி என்னை சாதி ரீதியில் பாகுபாடு காட்டி துன்புறுத்தினார். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டே என்னை வெகுவாக அடக்குமுறைக்கு ஆளாக்கினார். பணி நிமித்தமாக என்னை மிகவும் துன்புறுத்தினார். கோப்புகளில் கையெழுத்திடுவதை தாமதப்படுத்தினார்.
ஒரு கையெழுத்துக்காக இரவு வெகு நேரம் காத்திருக்கச் செய்வார். ஒரு வழியாக இரவில் காத்திருந்து அவரிடம் கோப்புகளில் கையெழுத்து வாங்க சென்றால் தம்பி இப்போது லேட் ஆகிவிட்டது. நாளை பார்த்துக்கலாம் என்பார். இது தினமும் நடந்தது. எனக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஜெ ராதாகிருஷ்ணனுக்கும் இடையே விரிசல் ஏற்படச் செய்தார். அவருடைய கொடுமைகள் தாங்காமல் நான் மன அழுத்தத்திற்கு சென்றேன். ஒரு கட்டத்தில் நான் அவரிடம் சொல்லியும் அதை அவர் பொருட்படுத்தாததால் தற்கொலைக்கு முடிவு செய்தேன். என் தந்தைதான் என்னை தேற்றி ஊக்கப்படுத்தினார்.
ககன் தீப் சிங் செய்த கொடுமைகள் எல்லாம் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது என தனது புகாரில் மணீஷ் தெரிவித்துள்ளார். அனைத்து இடங்களிலும் நேர்மையான அதிகாரி, நல்ல அதிகாரி என பெயர் பெர்ர ககன்தீப் சிங் மீது இப்படியொரு புகாரா என அதிர்ச்சி ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ் இந்து நாளிதழுக்கு ககன்தீப் கூறுகையில் மணீஷ் நல்ல அதிகாரி, அவரின் கடிதத்தை நான் படித்தேன்.
அவருடைய கடிதம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கொரோனா காலத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றினார். சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய காலத்தில் மிகவும் சிறப்பாக பணியாற்றினார். அவருடைய பணிகளை பாராட்டி நான் சான்றிதழ்களை அளித்துள்ளேன். அவருடைய சர்வீஸ் ரெக்கார்டு என அழைக்கப்படும் பணி பதிவேட்டில் அவர் சிறப்பாக பணியாற்றினார் என பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தேன். யாரும் ஒரு போதும் சாதிய ரீதியாக பாகுபாடு காட்டியது கிடையாது என விளக்கமளித்துள்ளார்.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications