சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்.. ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் கடந்த 2020 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் பல அதிரடிகளை செய்து வருகிறார்.

தமிழக முதல்வரின் தனி செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டனர். அது போல் தமிழக தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
இதனிடையே சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதும் தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார்கள் ஸ்டாலினின் காதுகளை எட்டின. மேலும் இந்த இக்கட்டான சூழலில் அனுபவம் வாய்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசு கருதியது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ககன் தீப் சிங் பேடி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார். தற்போது தமிழக வேளாண் துறை முதன்மை செயலாளராக உள்ளார்.












Click it and Unblock the Notifications