சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Breaking News Live: கஜா புயல் கரையை கடக்கும் ரூட்டில் திடீர் மாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள 'கஜா' புயல், வரும் 15ம் தேதி, வியாழக்கிழமை, நாகை மற்றும் சென்னை நடுவே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் தற்போது அதன் பாதை மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியாளர்களுக்கு இன்று மதியம் பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், பாலச்சந்திரன், நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவில், புயல் மையம் கொண்டுள்ளதாகவும், நவம்பர் 15ம் தேதி பிற்பகல், நாகை மற்றும் சென்னை நடுவே கரையை கடக்கும் என எதிர்பார்க்கிறோம் என்ற அவர், நவம்பர் 14ஆம் தேதி இரவு முதல், புயல் கரையை கடக்கும் வரை, தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், கடலூர், புதுச்சேரி விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பலவற்றில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவித்தார். ஆனால் புயலின் பாதை மாறி, கடலூர்-பாம்பன் நடுவே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக மாலையில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    தீவிரமடையும் கஜா புயல்-வீடியோ
    Gaja cyclone coming towards Tamilnadu - Live updates

    Newest First Oldest First
    5:21 PM, 12 Nov

    கஜா புயலை எதிர்கொள்வது தொடர்பாக திருவாரூர் ஆட்சியர் ஆலோசனை

    அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் நிர்மல்ராஜ் ஆலோசனை

    1:33 PM, 12 Nov

    தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி, நாகை,காரைக்காலில் பலத்த காற்று வீசும்

    கடலூர், விழுப்புரத்திலும் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

    1:33 PM, 12 Nov

    நாகை அருகே கஜா புயல்

    820 கி.மீ தொலைவில் புயல் இருக்கிறது

    சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    நவம்பர் 14 இரவு முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

    7 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை

    1:33 PM, 12 Nov

    கடல் நீர்மட்டம் 1 மீட்டருக்கு உயரக்கூடும்: பாலச்சந்திரன் பேட்டி

    கஜா புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

    1:32 PM, 12 Nov

    கஜா புயல் காரணமாக, சென்னையில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும்

    நவ. 14, 15ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

    1:32 PM, 12 Nov

    கஜா புயல் சென்னை - நாகை இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்

    கஜா புயல் வரும் 15-ம் தேதி கரையை கடக்கும்

    வட தமிழகத்தில் ஒரே நாளில் 20 செமீ.க்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு

    சென்னையில் இருந்து 750 கிமீ தொலைவில் புயல் உள்ளது

    அடுத்த 24 மணி நேரத்தில் கஜா புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும்

    English summary
    Gaja cyclone coming towards Tamilnadu, says Chennai meteorological department, here you can find live updates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X