கஜா நிவாரண நிதி.. ரூ.1 கோடி, எம்பி. எம்எல்ஏவின் ஒருமாத சம்பளம் அளிக்கப்படும்.. ஸ்டாலின் அறிவிப்பு!
கஜா புயல் நிவாரணத்திற்காக திமுக அறக்கட்டளை சார்பாக ரூ.1 கோடி வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கஜா புயல் நிவாரணத்திற்காக திமுக அறக்கட்டளை சார்பாக ரூ.1 கோடி வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுக்க கஜா புயல் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை மொத்தமாக நசிந்து போய் உள்ளது.

இந்த புயலால் 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் பேரிழப்பை சந்தித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த புயல் நிவாரணத்திற்காக திமுக நிதி அறிவித்துள்ளது.
அதன்படி கஜா புயல் நிவாரணத்திற்காக திமுக அறக்கட்டளை சார்பாக ரூ.1 கோடி வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளா வெள்ளத்தின் போதும் திமுக இப்படி உதவியது குறிப்பிடத்தக்கது.
சேதங்களில் இருந்து மக்களை மீட்க நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக அறக்கட்டளை சார்பில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. தமிழக முதல்வரின் அவசர நிதியுதவி பிரிவிற்கு பணம் அனுப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications