"கஜா"வை செமையாக "டீல்" செய்த தமிழக அரசு.. எல்லாம் ஓகி கற்றுக் கொடுத்த பாடம்!
கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் மிக முக்கியமான சாதனை ஒன்றை அரசு செய்துள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் மிக முக்கியமான சாதனை ஒன்றை அரசு செய்துள்ளது.
இனி வரும் பேரிடர் காலங்களில் எல்லா அரசும் பின்பற்ற வேண்டிய செயலை அரசு செய்துள்ளது. இந்த புயல் காரணமாக இன்று வரை ஒரு மீனவர் கூட பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கஜா புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மிக துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
[விழுந்த மரங்கள்.. மின் கம்பங்கள்.. உதவிக்கு ஆள் இல்லை.. தாங்களே களமிறங்கிய தஞ்சை மக்கள் ]

பெரிய சாதனை
இந்த புயல் காரணமாக கடலில் எந்த மீனவரும் சிக்கவில்லை. இது பேரிடர் காலங்களில் நடக்காத பெரிய சாதனை ஆகும். 100 சதவிகித மீனவர்கள் கரை சேர்ந்துவிட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். மீனவர்கள் தரப்பிலும் ஒரு மீனவர் கூட கடலில் மாட்டிக் கொண்டதாக புகார் அளிக்கப்படவில்லை. இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்களில், முதல்முறை இந்த புயலுக்குத்தான் இந்த நல்ல சம்பவம் நடந்து இருக்கிறது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டது
இந்த புயல் குறித்து ஒரு வாரம் முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீனவர்கள் கடலில் செல்ல தடையும் விதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் கடலோர காவல்படை களத்தில் இறங்கி மீனவர்களை கடலுக்கு செல்ல விடாமல் கண்காணித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மீட்டனர்
அதோடு புயலுக்கு ஒருநாள் முன் கடலுக்கு சென்ற மீனவர்களையும் கடலோர காவல்படை மீட்டது. 5 மீனவர்கள் ராமேஸ்வரம் கடல்பகுதியில் மீட்கப்பட்டனர். இவர்கள்தான் கடைசியாக அங்கு கடலுக்குள் செல்ல முயன்றவர்கள். மீனவர்களை கடலுக்கு அனுப்பாமல் அரசு தீவிரமாக கண்காணித்து.

ஓகி புயல்
ஓகி புயல் காரணமாக நிறைய மீனவர்கள் கடலில் காணாமல் போய் மறுநாள் பிணமாக கரை ஒதுங்கினார்கள். மத்திய அரசிடம் இவர்களின் விவரமும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் கூட சரியாக கணக்கில் இல்லை. அந்த மோசமான சம்பவத்தில் இருந்து பாடம் கற்ற தமிழக அரசு தற்போது கஜாவிற்காக களமிறங்கி, மீனவர்களை காப்பாற்றி உள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications