கஜா புயல் பாதிப்பு.. 1 லட்சம் பேர் வெளியேறிய பரிதாபம்.. மீட்பு முகாம்களில் தங்க வைப்பு
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணமாக 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கஜா புயலை தொடர்ந்து தமிழகம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.
இரவு 12 மணியில் இருந்து 3 மணிக்கு இடையில் கஜா புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது, 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

பாதிப்பு
கஜா புயல் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. இந்த நிலையில் கஜா புயல் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எந்த பகுதி மக்கள்
திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை, இராமேஸ்வரம், காரைக்கால் மாவட்ட மக்கள் பலர் மீட்பு முகாம்களுக்கு மாற்றபட்டுள்ளனர். இந்த 7 மாவட்டங்களில் புயல் மோசமாகி தாக்கி இருக்கிறது. இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அருகாமையில் உள்ள மீட்பு முகாம்களுக்கு சென்றுள்ளனர்.

எத்தனை பேர்
இதனால் பாதுகாப்பு இல்லாத இடங்களில் வசித்த 1 லட்சம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 20 ஆயிரம் குழந்தைகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்

எத்தனை முகாம்
இந்த 7 மாவட்டங்களில் மொத்தம் 520 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 15000க்கும் அதிகமான பணியாளர்கள் மீட்பு பணிக்காக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications