ரொம்ப நன்றிங்க.. பாராட்டிய ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அமைச்சர் ஆர்பி உதயகுமார்!
கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டிய எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி என்று அதிமுக அமைச்சர் உதயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டிய எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி என்று அதிமுக அமைச்சர் உதயக்குமார் பேட்டியளித்துள்ளார்.
கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மிக துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

[கஜா புயல் நடவடிக்கை.. தமிழக அரசு நன்றாக செயல்பட்டுள்ளது.. ஸ்டாலின் பாராட்டு!]
கஜா புயல் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின், கஜா புயல் நடவடிக்கையை தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது என்று பாராட்டினார்.
இந்த நிலையில் ஸ்டாலினின் கருத்து குறித்து பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
அதில், அரசின் பணியை பாராட்டிய எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. அரசின் பணியை பாராட்டிய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.
ஊடகங்களுக்கு நன்றி, ஊடகங்களின் ஈடுபாடு பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறது. கஜா புயல் மாலை 3-4 மணியளவில் முழுமையாக வலுவிழந்துவிடும்.
எண்ணிலடங்கா உயிர்களை காக்கும்வகையில் கட்டுப்பாட்டு அறை அமைத்து செயல்பட்டு வருகிறோம். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் சீரமைப்புப் பணிகள் நடக்கின்றன. தமிழக உள்மாவட்டங்களில் கஜா தற்போது நகர்ந்து வருகிறது என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications