கஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில் திடீர் மாற்றம்
கஜா புயலில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: கஜா புயலில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் நாளை மாலைதான் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் புயல் பாதிப்பு ஏற்படும். தமிழகம் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த புயல் பாம்பன் கடலூர் அருகே கரையை கடக்கும். இன்று மாலை இந்த புயல் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கிவிடும்.
[வருகிறது கஜா புயல்.. இன்றிலிருந்து கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை]
குழப்பமான புயல்
இந்த புயலுக்கு கஜா என்று பெயர் வைத்ததற்கு பதில் குழப்பம் என்று பெயர் வைத்து இருக்கலாம். அந்த அளவிற்கு இந்த புயல் வானிலை மையத்தை குழப்பி வருகிறது. முதலில் ஸ்ரீஹரிகோட்டா அருகே இந்த புயல் கடக்க இருந்தது. அதன்பின் சென்னை கடலூர் அருகே கடக்கும் என்று கூறப்பட்டது. இப்போது பாம்பன் கடலூர் அருகே கடக்க உள்ளது. இந்த புயலில் தற்போது புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
புயலில் மாற்றம்
இந்த நிலையில் கஜா புயல் கரையை கடப்பதில் புதிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நாளை மாலைதான் புயல் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாளை மதியம் கரையை கடக்காது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
என்ன காரணம்
புயலின் வேகம் குறைந்த காரணத்தால் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. புயல் இன்று காலை வரை 10-20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. ஆனால் இன்று காலையில் திடீர் என்று வேகம் குறைந்துள்ளது. தற்போது 6கிமீ வேகத்தில்தான் இந்த புயல் செல்கிறது.
ஆனாலும் மழை
அதே சமயம் கண்டிப்பாக இன்று இந்த புயல் அதி தீவிர சூறாவளி புயலாக மாறுவது உறுதி என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று மாலை தமிழகத்தில் மழை பெய்யும். பெரும்பாலும் இன்று இரவில் இருந்து புயலின் வேகமும் அதிகரிக்கும்.