வருகிறது கஜா புயல்.. இன்றிலிருந்து கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை
கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
சென்னை: கஜா புயல் காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
கஜா புயல் இன்று அதி தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் வேகமாக தமிழகத்தை நெருங்கி வருகிறது.
இன்று மாலை இந்த புயல் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கிவிடும். அதன்பின் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
எங்கு கரையை கடக்கும்
கஜா புயல் திசை மாறியதால் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கிறது. புயலால் சென்னைக்கு பெரிய பாதிப்பு இல்லை. புயல் கடக்கும் போது சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
எப்போது கடக்கும்
இந்த புயல் நாளை மதியம் கரையை கடக்க உள்ளது. ஆனால் இன்றே இதனால் அதிக அளவில் மழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இதனால் கனமழை பெய்யும்.
எங்கு எல்லாம் பெய்யும்
விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களில் புயல் பாதிப்பு ஏற்படும். தமிழகம் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை எப்படி
இந்த புயலால் சென்னைக்கு பெரிய பாதிப்பு இருக்கிறது. இன்றும், நாளையும் சென்னையில் லேசான மழை பெய்யும். ஆனால் இந்த மழையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.