விநாயகர் சதுர்த்தி.. சென்னையில் களைகட்டிய விற்பனை.. மார்க்கெட்களில் குவிந்த மக்கள்.. கொண்டாட்டம்!
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பொருட்கள் வாங்க மக்கள் பொது இடங்களில் குவிந்தனர்.
Recommended Video
நாடு முழுக்க இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளுக்கு இடையே அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடக்கிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுக்க விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொருட்கள் வாங்க மக்கள் பொது இடங்களில் குவிந்தனர்.நேற்று மாலையிலும், இன்று காலையிலும் மக்கள் கடை வீதிகளில் குவிந்தனர்.

சென்னை எப்படி
சென்னையிலும் பல இடங்களில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்க பொது இடங்களில் குவிந்தனர். சென்னையில் வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, தியாகராயநகர், பெரம்பூர், மயிலாப்பூர், அண்ணா நகர் ஆகிய இடங்களில் இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மார்க்கெட் நிலை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் பிரபல மார்க்கெட்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே சமயம் சிறிய சிறிய விநாயகர் சிலை விற்பனையும் களைகட்டியது. அழகான, சிறப்பான அலங்காரத்துடன் பல்வேறு விலைகளில் இன்று விநாயகர் சிலைகளை விற்பனை செய்தனர். இதை வாங்கவும் கூட்டம் கூடியது.

மற்ற பொருட்கள்
அதேபோல் விநாயகர் சதுர்த்தி அன்று பயன்படுத்தப்படும் குடைகள் அதிக அளவில் விற்பனை ஆனது. கொழுக்கட்டை மாவு, ரெடிமேட் கொழுக்கட்டை என்று உணவு பொருட்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது. அருகம்புல், மாட்டுச்சாணத்தில் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கும் நேற்றும் இன்றும் அதிக கிராக்கி நிலவி வருகிறது.

அமைதியான கொண்டாட்டம்
சென்னையில் சில இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கினார்கள். சில இடங்களில் போலீசார் கட்டுப்பாடு காரணமாக, மக்கள் சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கினார்கள். தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டுக்கு இடையே அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடக்கிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications