பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0.. பெண்களுக்கான அருமையான திட்டம்..இலவச சிலிண்டர் வேணுமா? இதை படிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: உஜ்வாலா 2.0 திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்பட்டு வரும்நிலையில், இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?

வறுமைக் கோட்டிற்குகீழே வாழும் பெண்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் மத்திய அரசு கொண்டுவந்த திட்டம்தான், உஜ்வாலா யோஜனா 2.0 திட்டமாகும்.. உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில், கடந்த 2016ல் பிரதமர் மோடியால், கொண்டுவரப்பட்ட திட்டம் இதுவாகும்..

Gas Cylinder Connection and Do you know how to apply for new Pradhan Mantri Ujjwala 2 0 Scheme

பெண்கள்: வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம் உஜ்வாலா யோஜனா திட்டமாகும். இதற்காகவே, மத்திய அரசு ரூ.8,000 கோடியை ஒதுக்கி செயல்படுத்திவருகிறது.

இந்த திட்டத்தினால் நாடுமுழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகவே பலனடைந்து வருகிறார்கள். அதன்படி, ஒவ்வொரு புதிய பயனாளிக்கும் ரூ.1,600 நிதியுதவியும் தரப்படுவதால், பயனாளிகள் இதை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம்.. கேஸ் சிலிண்டரை நிரப்பி கொள்வது அல்லது எல்பிஜி அடுப்பு பெற்றுக்கொள்ளலாம்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த திட்டம் உள்ள நிலையில், பெண்கள் இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா? இதன் தகுதிகள் என்னென்ன தெரியுமா?

தகுதிகள்: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின்கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு பெற முடியும்... விண்ணப்பிக்கும் பெண், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அதேபோல, அவருக்கு இதுவரை சமையல் சிலிண்டர் இணைப்பு எதுவும் இல்லாதிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்திய பிரஜையாக இருக்க வேண்டும். இவ்வளவு தகுதியும் இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரிலேயே சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.

இதைத்தவிர, பட்டியல் வகுப்பு/பழங்குடி குடும்பங்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், அந்த்யோத்யா அன்ன யோஜனா, காட்டு வாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழுள்ளவர்களும் இந்த திட்டத்தின்மூலம் பலன்பெறலாம்.

தேவையான ஆவணங்கள்: நகராட்சி தலைவர் (நகர்ப்புற பகுதி) அல்லது பஞ்சாயத்து தலைவர் (கிராமப்புற பகுதி) வழங்கிய வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கான சான்றிதழ், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நம்பர், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜாதி சான்றிதழ், முகவரி ஆவணம், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் போன்றவை கட்டாயம் வேண்டும். ள

எப்படி விண்ணப்பிப்பது

- www.pmuy.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் சென்று, உஜ்வாலா 2.0 திட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்

- விண்ணப்ப படிவத்தில் கேட்டுள்ள, பெயர், முகவரி, ஜன்தன் கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

- இப்போது, அடையாள ஆவணங்கள் அனைத்தையும் அப்லோடு செய்ய வேண்டும்

- இறுதியில், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+