Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கலக்கல் வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார். இதற்கிடையே வெற்றிக்குப் பிறகு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக விரிவாக நாம் பார்க்கலாம்!

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றி பயிற்சியாளராக கௌதம் கம்பீருக்கு ஒரு முக்கிய அங்கீகாரமாக இருக்கிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் தோல்விகளுக்குப் பின் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக டி20 கோப்பை அமைந்துள்ளது.

Gautam Gambhir India

டி20 இறுதிப் போட்டி

இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் மூன்று T20 உலகக் கோப்பைகளை (2007, 2024, 2026) வென்ற முதல் அணியாகவும், சொந்த மண்ணில் பட்டத்தைத் தக்கவைத்த முதல் அணியாகவும் திகழ்கிறது. இதற்கிடையே உலகக் கோப்பையை வென்ற பிறகு கம்பீர் கூறிய சில கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் யாருக்குப் பொறுப்பு என்பது எனக்குத் தெரியும்.. சமூக வலைத்தளங்களில் உள்ளவர்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை. டீமில் இருக்கும் 30 பேரிடம் மட்டுமே நான் பொறுப்பு. ஒரு டீம் எவ்வளவு நன்றாக இருக்கிறதோ.. அதே அளவு தான் பயிற்சியாளருக்கும் பெயர் கிடைக்கும். வீரர்கள் அனைவரும் சேர்ந்து தான் என்னை இந்தளவுக்கு அழைத்து வந்தனர்" என்றார்.

அந்த இரண்டு பேர்

வெற்றிப் பெருமிதத்திலும், கம்பீர் 2024-ல் அணியை வழிநடத்திய ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்செலென்ஸ் தலைவரான விவிஎஸ் லக்ஷ்மணை மறக்கவில்லை. அவர் மேலும் கூறுகையில், "இந்தக் கோப்பையை டிராவிட் மற்றும் லக்ஷ்மண் ஆகியோருக்கு அர்ப்பணிக்கிறேன். இந்திய அணியைச் சரியான நிலையில் நிறுத்திய ராகுல் பாய்க்கும், சென்டர் ஆஃப் எக்செலென்ஸில் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கிய லக்ஷ்மணுக்கும் எனது நன்றி. கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் நேர்மையாகச் செயல்பட்ட அகர்கருக்கும், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா தோல்விகளுக்குப் பிறகும் எனக்குப் பக்கபலமாக இருந்த ஜெய் பாய்க்கும் நன்றி" என்றார்.

அதிரடி

இந்திய அணி இறுதி போட்டியில் வழக்கம் போல பேட்டிங்கில் அதிரடி காட்டியது. 20 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை குவித்தது. பின்னர் நியூசிலாந்து அணியை 159 ரன்களுக்குள் சுருட்டி, எளிதாக வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 89, அபிஷேக் சர்மா 52, இஷான் கிஷன் 54 ரன்கள் குவித்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். பந்துவீச்சில், ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அக்ஸர் படேலும் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சூர்யகுமார் யாதவ்

இந்திய அணியின் திறமை குறித்து கம்பீர் மேலும் பேசுகையில், "தோல்வி குறித்த பயத்தை நாம் கைவிட வேண்டும்; 250 ரன்கள் அடிக்கத் துணிச்சல் காட்டுவதுதான் எங்கள் சிறப்பம்சம். சூர்யா என் வேலையை எளிதாக்கினார். அவர் ஒரு மிக சிறந்த கேப்டன். கோப்பைகளைக் கொண்டாடுவதே பெரிய நோக்கம், தனிப்பட்ட மைல்கற்கள் அல்ல. பல ஆண்டுகளாக நாம் தனிப்பட்ட மைல்கற்களைக் கொண்டாடி வருகிறோம். அதை நிறுத்துமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+