“பித்தலாட்டம் அண்ணாமலை”.. உங்களை காப்பாற்றுவது மோடி வேலையா? கேலி பண்றாங்க - கடுப்பான காயத்ரி ரகுராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆருத்ரா ஊழல் வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறிய ஆர்.எஸ்.பாரதியிடம் ரூ.500 கோடி இழப்பீடு பெற்று பிஎம் கேர்ஸுக்கு வழங்குவதாக அண்ணாமலை கூறிய நிலையில், தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு அவர் பிரதமர் மோடியை பயன்படுத்தி வருவதாக நடிகை காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் என்று கூறி கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ஒரு பிரசெண்டேசனை வெளியிட்டார். ஆனால், திமுகவினரின் சொத்துப் பட்டியலை மட்டுமே அண்ணாமலை வெளியிட்டு உள்ளதாக பலர் விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், திமுக நிர்வாகிகள் மீதான அவதூறான ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாக கூறி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Gayathri Raghuram comment BJP Annamalai on DMK files, Aarudhra scam and PM Cares

அதில், "திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் நற்பெயரைக் கலங்கப்படுத்தவும் அவதூறு செய்யவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறீர்கள். DMK FILES என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் நீங்கள் திமுக கட்சி மீது பல தவறான, அவதூறான, ஆதாரமற்ற, கற்பனையான குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளீர்கள்." என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்து உள்ளார்.

"உங்கள் பேச்சு/குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் விடியோவை நீக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ. 500,00,00,000 (ரூபாய் ஐந்நூறு கோடிகள் மட்டும்) எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்ய தவறினால், உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார்." என்று திமுக மற்றும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பாக தான் கூறிக்கொள்வது என ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டு இருக்கிறார்.

Gayathri Raghuram comment BJP Annamalai on DMK files, Aarudhra scam and PM Cares

இதுகுறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி ரகுராம், "திமுக, அண்ணாமலையை விட்றாதீங்க. பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு, தன்னிடம் 4 ஆடுகள் மட்டுமே உள்ளது என்று கூறினால், அண்ணாமலையின் நண்பர்கள் பெரிய பணக்காரர்கள்.. அந்த ₹500 கோடியை அவரது தாராள நண்பர்களை கொடுக்கச் சொல்லுங்கள் அல்லது அவர் தனது நண்பர்களைக் கொடுக்கச் சொல்வார்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஆருத்ரா ஊழல் வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறிய ஆர்.எஸ்.பாரதியிடம் ரூ.500 கோடி இழப்பீடு பெற்று பிஎம் கேர்ஸுக்கு வழங்குவதாக அண்ணாமலை கூறி இருந்தார். இதுகுறித்து இன்று ட்விட்டரில் பதிவிட்ட காயத்ரி, "திமுக அவதூறு வழக்கு தொடர்ந்து அண்ணாமலை அந்த ₹500 கோடியை PM Cares நிதிக்கு கொடுப்பாராம்.. இது என்ன நியாயம்? இது என்ன போங்கு? PM Cares நிதியை எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கேலி செய்கிறது. மோசடி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள். இப்போ அண்ணாமலை PM Cares நிதியை தேவையில்லாமல் இழுத்து வருகிறார். பித்தலாட்டம் அண்ணாமலை.

Gayathri Raghuram comment BJP Annamalai on DMK files, Aarudhra scam and PM Cares

ஆருத்ரா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கேட்டீர்கள்.. பிறகு எங்கே தப்பிக்கப் பார்க்கிறாய்? அமெரிக்காவா? அண்ணாமலை. பிரதமரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அண்ணாமலையின் பித்தலாட்டம் முட்டாள்தனத்தை காப்பாற்றுவது பிரதமரின் வேலையா? பிஜேபியின் முக்கிய தலைவர்களின் பெயர்களை விருப்பப்படி பயன்படுத்தி பிரதமர் பெயரை விருப்பப்படி பயன்படுத்தி தப்பிப்பதா? பாஜக தேசிய கட்சி என்பதை அண்ணாமலை மறந்துவிட்டார். அவர் தனது தனிப்பட்ட குழப்பத்திற்காக மத்திய அலுவலகத்தையோ பிரதமரையோ இழுக்க முடியாது." என்று சாடி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+