விவசாயிகளுக்கு குஷி.. எல்லாமே தலைகீழாக திரும்புதே.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. வருகிறது தமிழக அரசு அதிரடி
சென்னை: விவசாயிகளின் வளமான வாழ்க்கைக்காக, இன்னொரு அதிரடி ஏற்பாட்டை மத்திய அரசு செய்திருக்கிறது.. அது என்ன தெரியுமா?
விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதற்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அமல்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக, பிஎம் கிசான் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே துவங்கப்பட்ட திட்டமாகும். இந்த பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டத்தில், விவசாயிகளுக்கு பண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பாரத் ஆட்டா: ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது. அதேபோல, விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், "பாரத்' பிராண்ட் ஆட்டா, 'பாரத் ரைஸ் ' போன்றவை மலிவு விலையில் கொண்டுவரப்பட்டுள்ளன.
அந்தவகையில் தமிழக அரசும் விவசாயிகளின் நலனில் பெரும் அக்கறை செலுத்தி வருகிறது.. வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்றவை ஏற்பட்டு வருவதால், இந்த குறைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறைந்த வாடகை: விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் விவசாய கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன... இந்த இயந்திரங்களை விவசாயிகள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் ரிசர்வ் செய்துகொள்ளும் "இ-வாடகை" என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார்..
இந்த வரிசையில், விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காகவே புதிய செயலி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.. அதாவது, மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
நெல் எடை: நெல் விளையும் மாவட்டங்களில், வாணிப கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை துவங்கி, விவசாயிகள் எடுத்து வரும் நெல், எடை போட்டு வாங்கப்படுகிறது. இதற்காகவே மத்திய, மாநில அரசுகளின் சார்பில், 100 டன் எடை கொண்ட குவிண்டால் நெல்லுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையும் வழங்கப்பட்டு வருகிறது.
நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகளிடமிருந்து புகார் பெற்று விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே, குறைதீர்க்கும் இந்த மொபைல் போன் செயலியை நுகர்பொருள் வாணிப கழகம் அறிமுகம் செய்திருக்கிறது... இந்த பணம், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
முறைகேடுகள்: ஆனாலும் இதில் சில முறைகேடுகள் நடப்பதாக தெரிகிறது.. குறிப்பாக, எடையை குறைத்து வாங்குவது, ஒரு மூட்டைக்கு கமிஷன் வாங்குவது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்..
எனவே, பாதிக்கப்பட்டோர் சென்னையில் உள்ள வாணிப கழக அலுவலக கட்டுப்பாட்டு மையத்தின் எண்ணில் புகார்களை தரலாம்.. ஆனால், ஒரே சமயத்தில் நிறைய பேர் புகார் தரும்போது, இணைப்பு சரியாக கிடைப்பதில்லையாம்..
அதனால்தான், விவசாயிகளிடம் எப்போது வேண்டுமானாலும் புகார் தர வேண்டும் என்பதற்காகவும், அந்த புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதற்காகவும் குறைதீர்க்கும் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்..
சபாஷ்: இனிமேல் விவசாயிகள் இந்த செயலில் அனைத்து புகார்களையும் தரலாம்.. அதேபோல, நெல் வழங்குவதற்கான விபரங்களையும், இந்த செயலியில் பதிவு செய்யலாம்... அப்படி பதிவு செய்தால், நெல்லை எப்போது கொண்டுவர வேண்டும் என்ற விபரமும் தெரிவிக்கப்படுமாம்.. அந்தவகையில் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய இந்த மொபைல் போன் செயலி, விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications